தமிழகத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்.. இலவச இணையதளத்தை துவக்கி வைத்தார் முதல்வர்
சென்னை: தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையம்' 'Tamil Nadu Private Job portal' (https://www.tnprivatejobs.tn.gov.in) என்ற பெயரில் புதிய இணையதளத்தை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்துள்ளார்.
தமிழகத்தில் படித்து முடித்து விட்டு வேலை தேடும் இளைஞர்களுக்கு தனியார் துறையில் நிறைய வேலைகள் உள்ளன. இந்நிலையில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தரும் முயற்சியாக இந்த இணையம் துவங்கி வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தனியார் துறையில் ஏராளமான வேலைகள் கொட்டிக்கிடக்கிறது. சரியான தொழில் பயிற்சியும், திறமை உள்ளவர்களுக்கு பல்வேறு தொழில் நகரங்கள் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கின்றன. எனவே படித்து முடித்தவர்கள் இதை பயன்படுத்தலாம்.

பல்வேறு நகரங்களில் வேலைகள்
சென்னை, திருப்பூர், கோவை, ஈரோடு, நாமக்கல், ஓசூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட பல்வேறு தொழில் நகரங்களில் நிறைய பணிகளுக்கு ஆட்கள் தேவை உள்ளது. திறமையான நபர்களை நிறுவனங்கள் தேடுகின்றன. இந்த சூழலில் தான் தமிழகத்தில் இயங்கி வரும் தனியார் தொழில் நிறுவனங்கள் மற்றும் வேலை தேடும் இளைஞர்களை ஒருங்கிணைத்து புதிய வலைதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

பணி அனுபவம்
தனியார் துறையில் பணியாற்ற விருப்பம் உள்ள இளைஞர்கள், இந்த https://www.tnprivatejobs.tn.gov.in இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். தங்களின் கல்வித் தகுதி, முன் அனுபவங்களுக்கு ஏற்ற வேலைகளை இதில் பெறலாம். தமிழகத்தில் உள்ள தனியார் துறை சார்ந்த அனைத்து சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரு நிறுவனங்களும் அதிகாரப்பூர்வமாக தங்கள் நிறுவனத்தின் காலிப்பணியிடங்களை இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்கின்றன. ஆனால் அரசு வேலைகள் இதில் இடம் பெறாது.

மொபைல் அப்ளிகேசன்
இந்த இணையதளத்தில் தொழில் மற்றும் துறைவாரியாக காலி பணியிடங்களை பார்க்க முடியும். உதாரணமாக உங்களுக்கு சிஎன்சி மெஷின் துறையில், ஆட்டோ மொபைல் துறையில், லாஜிஸ்டிக், எலக்ட்ராக்ஸ் அன்டு ஹார்டுவேர், சில்லறை விற்பனை கடைகள், உணவு தொழில், ஐடி துறை, டெக்ஸ்டைல் துறை உள்பட எந்த துறையில் உங்களுக்கு வேலை தேவை என்றாலும் பட்டியலில் பார்க்க முடியும். இதேபோல் எந்த ஊரில் வேலை காலியாக உள்ளது என்பதும் தெரிவிக்கப்பட்டிருக்கும். The Tamil Nadu Private Job Portal மொபைல் அப்ளிகேஷனும் உள்ளது.

ஆன்லைன் நேர்காணல்
அரசின் இந்தச் சேவைகள், கட்டணமின்றி இலவசமாகவே வழங்கப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இதன் மூலம் ஆன்லைன் விண்ணப்பங்கள், ஆன்லைன் நேர்காணல் மற்றும் ஆன்லைன் வழியாகவே பணி நியமனம் ஆகிய வசதிகளைப் இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும் ;மேலும் தனியார் துறைகளும் தங்களின் பணி வாய்ப்புக்களுக்கு தகுதியுள்ளவர்களுக்கு உடனடியாக வழங்க முடியும் என்று அரசு தெரிவித்துள்ளது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications