ரூ.35,400 டூ ரூ.1.30 லட்சம் வரை சம்பளம்.. தமிழக மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தில் சூப்பர் வேலை!
சென்னை: தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் சித்தா பார்மசிஸ்ட் (மருந்தாளுநர்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.35,400 முதல் ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்து 400 வரை சம்பளம் வழங்கப்படும்.
தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு டிஎன்எம்ஆர்பி எனும் தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம்(TNMRB or Tamil Nadu Medical Recruitment Board) சார்பில் ஆட்சேர்ப்பு நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தான் தற்போது பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்புகள் தனித்தனியே வெளியாகி உள்ளன. அதன் விபரம் வருமாறு:
காலியிடம்- கல்வி தகுதி: தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் சித்தா பார்மசிஸ்ட் (மருந்தாளுநர்) பணிக்கு 25 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் டிப்ளமோ பிரிவில் இந்தியன் சிஸ்டம் ஆப் மெடிசின், சித்தா பார்மசி, இன்டகிரேட்டட் பார்மஸி (டிஐபி) உள்ளிட்ட படிப்புகளில் ஏதேனும் ஒன்றை முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: பணிக்கு விண்ணப்பம் செய்வோர் பொதுப்பிரிவினராக இருந்தால் குறைந்தபட்சம் 18 வயதும் அதிகபட்சம் என்றால் 32 வயதுக்குள் இருக்க வேண்டும். பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகள் என்றால் 42 வயது வரையும், பொதுப்பிரிவு முன்னாள் படை வீரர் என்றால் 50 வயது வரையும் இருக்கலாம். எஸ்சி, எஸ்டி, எஸ்சிஏ, பிசி, பிசிஎம், எம்பிசி, டிஎன்சி பிரிவினர் என்றால் வயது வயது வரம்பு என்பது இல்லை.
மாதசம்பளம்: பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு Pay Matrix Level 11 அடிப்படையில் மாதசம்பளம் என்பது வழங்கப்பட உள்ளது. அதன்படி பார்த்தால் மாதம் குறைந்தபட்சமாக ரூ.35,400 சம்பளமாக வழங்கப்படும். அதிகபட்சம் என்றால் ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்து 400 வரை சம்பளம் கிடைக்கும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் www.mrb.tn.gov.in இணையதளம் மூலம் டிசம்பர் 18 ம் தேதி விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.600 நிர்ணயம் செய்ப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்சி, எஸ்டி, டிஏபி(பிஎச்), கைம்பெண்களுக்கு கட்டணம் ரூ.300 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்படி விண்ணப்பம் செய்வோர் மெரிட் லிஸ்ட் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பணியில் சேர்த்து கொள்ளப்படுவார்கள்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here
-
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
ஏழை மாணவர்களுக்கு சூப்பர் சான்ஸ்.. தனியார் பள்ளிகளில் LKG முதல் இலவசம்.. ஹென்றி சொன்ன தேதியை பாருங்க -
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி? -
Spot the difference: இந்த இரு படங்களுக்கிடையே 3 வித்தியாசங்களை கண்டுபிடியுங்கள்! சவாலுக்கு ரெடியா? -
இடி, மின்னலுடன் கனமழை.. ஆரஞ்சு அலர்ட் கொடுத்த வானிலை மையம்! மக்களே உஷார் -
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்!












Click it and Unblock the Notifications