8, 10, மாஸ்டர் டிகிரி முடித்தோருக்கு வாய்ப்பு.. அழைக்கும் அறநிலையத்துறை! கன்னியாகுமரியிலேயே வேலை
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஸ்ரீதேவி குமரி மகளிர் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி 8 ம் வகுப்பு, 10ம் வகுப்பு மற்றும் மாஸ்டர் டிகிரி முடித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்யலாம்.
தமிழ்நாட்டில் உள்ள ஏராளமான கோவில்களை அரசின் இந்து சமய அறநிலையத்துறை நிர்வகித்து வருகிறது. இந்த கோவில்களின் கீழ் கல்வி நிறுவனங்களும் இயங்கி வருகின்றன.

அதன்படி கன்னியாகுமரி மாவட்ட கோவில்கள் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் குழித்துறையில் ஸ்ரீதேவி குமரி மகளிர் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் காலியாக உள்ள பணியிடங்ளை நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
உதவி பேராசிரியர் பணி: உதவி பேராசிரியர் பணி பிரிவில் விலங்கியலுக்கு ஒருவர், மலையாளத்துக்கு ஒருவர், கணிதத்துக்கு 2 பேர், தாவரவியலுக்கு ஒருவர் என மொத்தம் 5 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர் குறிப்பிட்ட பிரிவில் மாஸ்டர் டிகிரி முடித்திருக்க வேண்டும்.
தட்டச்சர் - லேப் அசிஸ்டென்ட்: தட்டச்சர் பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளார். 10ம் வகுப்பு முடித்து தமிழ், ஆங்கில தட்டச்சு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதில் ஏதேனும் ஒன்றில் ஹையர் முடித்திருக்க வேண்டும். அதோடு லேப் அசிஸ்டென்ட் பணிக்கு 3 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
பிற பணியிடங்கள்: இதுதவிர ஸ்டோர் கீப்பர் பணிக்கு ஒருவர், பதிவறை எழுத்தர் (Record) பணிக்கு 2 பேர், லைப்ரேரி அசிஸ்டென்ட் பணிக்கு ஒருவர், ஆபிஸ் அசிஸ்டென்ட் பணிக்கு 2 பேர் என மொத்தம் 6 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் ஸ்டோர் கீப்பர், பதிவறை எழுத்தர், லைப்ரேரி அசிஸ்டென்ட் ஆகிய பணிகளுக்கு 10ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். அலுவலக உதவியாளர் பணிக்கு 8 ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
மாத சம்பளம்: இந்த பணிகளுக்கான மாதசம்பளம் குறித்த விபரம் எதுவும் தற்போது வெளியாகவில்லை. இருப்பினும் தகுதியின் அடிப்படையில் நல்ல சம்பளம் என்பது வழங்கப்படும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் www.sdkwc.org.in இணையதளம் சென்று விண்ணப்பம் பதிவிறக்கி பூர்த்தியிட்டு உரிய கல்வி சான்றிதழ், சாதி சான்றிதழ் நகலுடன் விண்ணப்பம் செய்ய வேண்டும்.
விண்ணப்ப முகவரி: விண்ணப்பங்களை ‛‛செயலர், ஸ்ரீதேவி குமரி மகளிர் கல்லூரி, குழித்துரை - 629163, கன்னியாகுமரி'' என்ற முவரிக்கு 2024 ஜனவரி மாதம் 4ம் தேதி மாலை 5 மணிக்குள் கிடைக்கும்படி விண்ணப்பிக்க வேண்டும். மேலும் சந்தேகங்கள் இருப்பின் 04651-260344 என்ற எண், இல்லாவிட்டால் [email protected] இ-மெயில் முகவரியை தொடர்பு கொள்ளலாம்.
-
அதிகாலையில் வந்த மெயில்.. மீண்டும் வேலையை காட்டிய மெட்டா! ஊழியர்கள் கண்ணீர்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம்












Click it and Unblock the Notifications