8, 10, மாஸ்டர் டிகிரி முடித்தோருக்கு வாய்ப்பு.. அழைக்கும் அறநிலையத்துறை! கன்னியாகுமரியிலேயே வேலை
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஸ்ரீதேவி குமரி மகளிர் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி 8 ம் வகுப்பு, 10ம் வகுப்பு மற்றும் மாஸ்டர் டிகிரி முடித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்யலாம்.
தமிழ்நாட்டில் உள்ள ஏராளமான கோவில்களை அரசின் இந்து சமய அறநிலையத்துறை நிர்வகித்து வருகிறது. இந்த கோவில்களின் கீழ் கல்வி நிறுவனங்களும் இயங்கி வருகின்றன.

அதன்படி கன்னியாகுமரி மாவட்ட கோவில்கள் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் குழித்துறையில் ஸ்ரீதேவி குமரி மகளிர் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் காலியாக உள்ள பணியிடங்ளை நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
உதவி பேராசிரியர் பணி: உதவி பேராசிரியர் பணி பிரிவில் விலங்கியலுக்கு ஒருவர், மலையாளத்துக்கு ஒருவர், கணிதத்துக்கு 2 பேர், தாவரவியலுக்கு ஒருவர் என மொத்தம் 5 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர் குறிப்பிட்ட பிரிவில் மாஸ்டர் டிகிரி முடித்திருக்க வேண்டும்.
தட்டச்சர் - லேப் அசிஸ்டென்ட்: தட்டச்சர் பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளார். 10ம் வகுப்பு முடித்து தமிழ், ஆங்கில தட்டச்சு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதில் ஏதேனும் ஒன்றில் ஹையர் முடித்திருக்க வேண்டும். அதோடு லேப் அசிஸ்டென்ட் பணிக்கு 3 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
பிற பணியிடங்கள்: இதுதவிர ஸ்டோர் கீப்பர் பணிக்கு ஒருவர், பதிவறை எழுத்தர் (Record) பணிக்கு 2 பேர், லைப்ரேரி அசிஸ்டென்ட் பணிக்கு ஒருவர், ஆபிஸ் அசிஸ்டென்ட் பணிக்கு 2 பேர் என மொத்தம் 6 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் ஸ்டோர் கீப்பர், பதிவறை எழுத்தர், லைப்ரேரி அசிஸ்டென்ட் ஆகிய பணிகளுக்கு 10ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். அலுவலக உதவியாளர் பணிக்கு 8 ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
மாத சம்பளம்: இந்த பணிகளுக்கான மாதசம்பளம் குறித்த விபரம் எதுவும் தற்போது வெளியாகவில்லை. இருப்பினும் தகுதியின் அடிப்படையில் நல்ல சம்பளம் என்பது வழங்கப்படும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் www.sdkwc.org.in இணையதளம் சென்று விண்ணப்பம் பதிவிறக்கி பூர்த்தியிட்டு உரிய கல்வி சான்றிதழ், சாதி சான்றிதழ் நகலுடன் விண்ணப்பம் செய்ய வேண்டும்.
விண்ணப்ப முகவரி: விண்ணப்பங்களை ‛‛செயலர், ஸ்ரீதேவி குமரி மகளிர் கல்லூரி, குழித்துரை - 629163, கன்னியாகுமரி'' என்ற முவரிக்கு 2024 ஜனவரி மாதம் 4ம் தேதி மாலை 5 மணிக்குள் கிடைக்கும்படி விண்ணப்பிக்க வேண்டும். மேலும் சந்தேகங்கள் இருப்பின் 04651-260344 என்ற எண், இல்லாவிட்டால் [email protected] இ-மெயில் முகவரியை தொடர்பு கொள்ளலாம்.
-
IT Jobs: சென்னை - பெங்களூர் உள்பட 3 இடங்களில் நாளை இண்டர்வியூ.. TCS-யில் காலிப்பணியிடங்கள் -
IT JOBS: 2026ல் படிப்பை முடித்தோருக்கு ஜாக்பாட்.. அலோவன்ஸ் + சம்பளத்துடன் வேலை தரும் Cognizant -
இந்திய நர்ஸை.. ஆண்ட்டி என்று அழைத்த நபர்! நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு! -
இந்தியன் வங்கியில் சிறப்பு அதிகாரி வேலை.. 350 பணியிடங்கள்.. பிஇ முடித்தவங்களுக்கு ஜாக்பாட் -
Group 4: குரூப் 4 தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. 3-ம் கட்ட கலந்தாய்வு எப்போது? -
CRPF Job: மத்திய ரிசர்வ் காவல் படையில் 9,195 கான்ஸ்டபிள் பணியிடங்கள்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்! 69 ஆயிரம் சம்பளம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: உங்கள் நகை எப்போது கைக்கு வரும்? முழு விவரம் -
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு -
ஒரு கிராம் தங்கம் வெறும் ரூ.181 தான்.. முட்டை விலையை விட குறைவு.. எந்த நாட்டில் தெரியுமா? பின்னணி -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications