டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிக்கான போட்டித்தேர்வு இன்று தொடக்கம்
சென்னை: டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிக்கான நேர்முகத் தேர்வு அல்லாத 654 காலிப்பணியிடங்களுக்கு இன்று முதல் போட்டித்தேர்வுகள் நடக்கின்றன. வரும் 23 ஆம் தேதி வரை தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள 161 மையங்களில் கணினி வழித்தேர்வு நடைபெறுகிறது. சென்னையில் 13,425 பேர் உள்பட மொத்தம் 95,925 பேர் இந்த தேர்வை எழுத உள்ளனர்.
சென்னை: 654 ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவை பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி கடந்த மாதம் வெளியிட்டது. உதவி பொறியாளர் (சிவில்), வேளாண்மை அதிகாரி, உதவி இயக்குநர், என மொத்தம் 654 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கு எப்படி விண்ணப்பிப்பது, கல்வித்தகுதி என்ன என்பது பற்றி இங்கே பார்க்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை தான் கடைசி நாள் ஆகும்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் எனப்படும் ( டி.என்.பி.எஸ்.சி) மூலமாக, தமிழக அரசு துறைகளில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. குரூப் 1, குரூப் 2, 2ஏ, குரூப் 4 என பல்வேறு நிலைகளில் உள்ள பணியிடங்களுக்கு ஆண்டு தோறும் உரிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு போட்டித்தேர்வு மூலமாக பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
அந்த வகையில், 654 ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவை பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த ஜூலை மாதம் வெளியானது. உதவி பொறியாளர் (சிவில்), வேளாண்மை அதிகாரி, உதவி இயக்குநர், திட்டமிடல் அதிகாரி, வேதியியியல் அதிகாரி, புள்ளியில் அதிகாரி, ஜூனியர் மேனேஜர் பல்வேறு அதிகாரி பணியிடங்கள் என மொத்தம் 654 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களில் 95,925 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன.
தாள் ஒன்று மற்றும் தாள் இரண்டு என இரண்டு வகையான தேர்வுகள் நடைபெறும். தாள் ஒன்று என்பது தமிழ் தகுதி தேர்வு, பொது அறிவு மற்றும் தகுதியை உறுதி செய்யும் வகையில் தேர்வு இருக்கும். இந்த நிலையில் இன்று இந்த தேர்வு தொடங்குகிறது. இன்று முதல் வரும் 23 ஆம் தேதி வரை இந்த தேர்வானது நடைபெறுகிறது. சென்னையில் 13,425 பேர் உள்பட மொத்தம் 95,925 பேர் இந்த தேர்வை எழுத உள்ளனர். இதற்காக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 161 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 161 மையங்களில் கணினி வழியாக தேர்வு நடைபெறுகிறது.












Click it and Unblock the Notifications