டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அடுத்த அறிவிப்பு.. 61 பணியிடங்கள்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? விவரம்
சென்னை: சட்டம் படித்தவர்களுக்கான தேர்வு அறிப்பு ஒன்றை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. மொத்தம் 61 Assistant Public Prosecutor பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும். எப்படி விண்ணப்பிப்பது? போன்ற விவரங்களை இங்கே காணலாம்.
தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வு ஆணையம் நிரப்பி வருகிறது. குரூப் 1, 2, 2ஏ, குரூப் 4 என பல்வேறு நிலைகளில் உள்ள காலிப்பணியிடங்களை டிஎன்பிஸ்சியே நிரப்பி வருகிறது.

அரசு உதவி வழக்கு நடத்துநர்
தமிழக அரசு பணிக்காக காத்திருக்கும் பல லட்சக்கணக்கான தேர்வர்கள், டிஎன்பிஎஸ்சி வெளியிடும் தேர்வு அறிவிப்பினை எதிர்பார்த்து காத்திருப்பார்கள். இந்த நிலையில்தான், சட்டம் படித்தவர்களுக்கான தேர்வு அறிப்பு ஒன்றை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
அதாவது, குற்ற வழக்கு தொடர்பு துறையில் உள்ள அரசு உதவி வழக்கு நடத்துநர், நிலை II பதவிக்கான 61 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் 02:12.2025 முதல் 31.12.2025 வரை இணையவழியில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.
கல்வித் தகுதி என்ன?
முதல்நிலைத் தேர்வு 15.02.2026 அன்று நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து இளங்கலை சட்டம் ( B.L) முடித்து இருக்க வேண்டும். கிரிமினல் நீதிமன்றங்களில் 5 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றியிருக்க வேண்டும். பார் கவுன்சிலில் உறுப்பினராக பதிவு செய்து இருப்பது கட்டாயம்.
வயது வரம்பு
தேர்வர்கள் இணையவழி விண்ணப்பத்தினை சமர்ப்பிக்கும் போது அவர்கள் குற்றவியல் நீதி மன்றங்களில் முனைப்புடன் 5 ஆண்டுகளுக்கு குறையாமல் வழக்கு நடத்தியிருந்தார் என்ற உரிமை கோரலுக்கு ஆதாரமான பயிற்சி சான்றிதழை பதிவேற்றம் செய்ய வேண்டும். முதுநிலை சட்ட படிப்பிற்கான காலம் வழக்கு நடத்தியதற்கான பயிற்சி காலத்திலிருந்து நீக்கப்பட மாட்டாது.
தேர்வின் உரிமைக் கோரல்களுக்கு ஆதாரமாக உள்ள சான்றுகளை பதிவேற்றம் செய்யத் தவறினால் அத்தேர்வரின் விண்ணப்பம் உரிய நடைமுறைகளுக்குப் பின்னர் நிராகரிக்கப்படும். வயது வரம்பை பொறுத்தவரை 26 வயது முதல் 36 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். SCs, SC(A)s, STs, MBCs/DCs, BC(OBCM)s and BCMs பிரிவினருக்கு வயது உச்ச வரம்பு கிடையாது.
விண்ணப்பிக்க கடைசி தேதி
முதல் நிலை தேர்வு, மெயின் தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் 31.12.2025 கடைசி நாளாகும். https://tnpsc.gov.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் முன்பாக தேர்வு அறிவிப்பினை படித்து உறுதிசெய்து கொள்ளவும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://tnpsc.gov.in/document/tamil/app_18_2025_tamil1.pdf
-
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே!












Click it and Unblock the Notifications