தேர்வு இன்றி சூப்பர் வேலை.. மாதம் ரூ.35,000 சம்பளம்.. அழைக்கும் திருச்சி என்ஐடி.. மிஸ் பண்ணாதீங்க
திருச்சி: திருச்சியில் செயல்பட்டு வரும் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் (National Institute of Technology or NIT) எழுத்து தேர்வு இன்றி மாதம் ரூ.35 ஆயிரம் சம்பளத்தில் என்ஜினீயர் டிரெய்னி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் என்ஐடி எனும் தேசிய தொழில்நுட்ப நிறுவனம் திருச்சியில் செயல்பட்டு வருகிறது. திருச்சியில் தஞ்சாவூர் மெயின் ரோட்டில் என்ஐடி அமைந்துள்ளது. இங்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது.

தற்போது வெளியாகி உள்ள அறிவிப்பின்படி என்ஜினீயர் டிரெய்னி பணிக்கு 7 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்வோர் பிஇ, பிடெக், எம்சிஏ, எம்.எஸ்சி (கம்ப்யூட்டர் சயின்ஸ்/ஐடி) படிப்பை முடித்திருக்க வேண்டும். அதோடு ஐஐடி, என்ஐடி, ஐஐஐடி, ஐஐஎம், பொதுத்துறை, தன்னாட்சி நிறுவனங்களில் குறைந்தபட்சம் 4 ஆண்டு டெக்னிக்கல் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
விண்ணப்பம் செய்வோரின் வயது என்பது 40க்குள் இருக்க வேண்டும். மேலும் அரசு விதிகளின் படி விண்ணப்பத்தாரர்களுக்கு வயது சலுகை என்பது வழங்கப்பட உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.37 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் https://www.nitt.edu/ எனும் இணையதளம் மூலம் பிப்ரவரி 17 ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணபப்ம் செய்ய வேண்டும்.
இந்த பணிக்கு விண்ணப்ப கட்டணம் எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை. இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். ஒருவேளை அதிகமானவர்கள் விண்ணப்பம் செய்யும்போது எழுத்து தேர்வும் நடத்தப்படும். விண்ணப்பம் செய்வோர் குறைந்த அளவில் இருந்தால் நேர்க்காணல் முறையில் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
இது ஒரு தற்காலிக பணியாகும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் முதல் 6 மாதம் என்ற அடிப்படையில் நியமனம் செய்யப்படுவார்கள். அதன்பிறகு அவர்களின் செயல்பாட்டை பொறுத்து அடுத்தடுத்து 6 மாதங்கள் என்ற அடிப்படையில் பணி நீட்டிப்பு என்பது வழங்கப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications