வீட்டில் இருந்தே வேலை.. அலுவலகம் போக வேண்டாம்.. மைக்ரோசாஃப்ட் தரும் சூப்பர் வாய்ப்பு
சென்னை: மைக்ரோசாஃப்ட் ஐடி நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு வீட்டில் இருந்தே வேலை செய்வதற்கான வாய்ப்பு என்பது வழங்கப்பட உள்ளது.
முன்னணி சாஃப்ட்வேர் நிறுவனங்களில் ஒன்று மைக்ரோசாஃப்ட் . இந்த நிறுவனம் நம்நாட்டிலும் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இருந்து அவ்வப்போது பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் தமிழ்நாட்டில் வீட்டில் இருந்தே பணியாற்ற தேவையான ஆட்கள் இப்போது தேர்வு செய்யப்பட உள்ளனர். அதன் விபரம் வருமாறு:
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் தற்போது சாஃப்ட்வேர் இன்ஜினியர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த பணிக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் டிகிரி முடித்தவர்கள் அல்லது தொடர்புடைய பிரிவில் டெக்னிக்கல்லாக திறமை இருப்பதோடு, சி, சி++, சி#, ஜாவா, ஜாவா ஸ்கிரிப்ட் அல்லது பைத்தான் மட்டுமின்றி பிறவற்றையும் தெரிந்து பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும்.
அதுமட்டுமின்றி கம்ப்யூட்டர் சயின்ஸ் ஃபண்டமண்டல்ஸ் தெரிந்திருக்க வேண்டும். தற்போதை அறிவிப்பின்படி எத்தனை பேர் பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர் என்பது தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் அதிகமானவர்கள் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது.
அதேபோல் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கான மாதம் அல்லது ஆண்டு சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்படவில்லை. தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்படலாம். அதுமட்டுமின்றி கடைசி கட்ட இண்டர்வியூவின்போது சம்பளம் பற்றி தெரிவிக்கப்படலாம்.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் Microsoft இணையதளம் சென்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள லிங்க்கை க்ளிக் செய்து விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் ‛வொர்க் ப்ரம் ஹோம்' முறையில் வீட்டில் இருந்தே வேலை செய்யலாம். தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி நாள் என்று எதுவும் குறிப்பிடப்படவில்லை. இதனால் இந்த பணியை விரும்புவோர் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது.
பணி தொடர்பான அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
அதிகாலை 6 மணிக்கு மெயில்! 12,000 இந்திய ஊழியர்கள் பணி நீக்கம்! ஷாக் கொடுத்த ஐடி நிறுவனம் -
ஒரே நாளில்.. அப்படியே ஸ்டன் ஆன ஊழியர்கள்.. எத்தனை வருட ஏக்கம்.. கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்?












Click it and Unblock the Notifications