Joke : தெரபிஸ்டுக்கே இந்த நிலைமையா? சிரிப்புக்கு பஞ்சமில்லாத கடி ஜோக்ஸ்!
சென்னை: சிரிப்பு ஒருவரின் வாழ்க்கையை அழகாக்கும். அந்த சிரிப்பு எங்கிருந்து வந்தாலும் எடுத்துக்கொள்ளுங்கள். அப்படித்தான் இங்கு ஒரு தெரப்பிஸ்டை பார்க்க சென்ற சிலரின் உரையாடல் உங்களுக்கு கண்டிப்பாக சிரிப்பை கொண்டு வரலாம். அதனால் இந்த கடி ஜோக்ஸை கொஞ்சம் படிக்கலாம் வாங்க.
மனமுடைந்த ஒருவர் தெரப்பிஸ்டை பார்க்க மருத்துவமனை சென்றுள்ளார். அவர் ஒரு கிளாஸ் நிறைய தண்ணீரை எடுத்து அவரின் முன்னே வைத்துள்ளார். பின்னர்
தெரபிஸ்ட்: நீங்கள் நம்பிக்கை கொண்டவரா அல்லது நம்பிக்கை பெரிதும் இல்லாதவரா?
மன நோயாளி: (அந்த கிளாசில் இருந்த நீரை குடித்து விட்டு) நான் பிரச்னைக்கே போகாதவன் சார்.
தெரபிஸ்ட்: !!!

மன நோயாளி: டாக்டர்.. என்னால் அவங்க நியாபகத்தில் இருந்து வெளியில் வர முடியவில்லை.
தெரபிஸ்ட்: நீங்கள் முதலில் இதெல்லாம் ஒரு கடிதத்தில் எழுதுங்க, பின்னர் எரிச்சிடுங்க.
மன நோயாளி: டாக்டர்.. நான் முதலே அவங்களை எரிச்சிட்டேன்.. இப்போ கடிதத்தை என்ன பண்றது..
தெரபிஸ்ட்: ???
தெரபிஸ்ட்: உங்கள் மனைவி உங்க மேல தான் குற்றசாட்டு வச்சிருக்காங்க..
மன நோயாளி: அப்படி நான் என்ன செய்தேன் டாக்டர்
தெரபிஸ்ட்: நீங்க ஒரு தடவை கூட பூ வாங்கவில்லையாமே?
மன நோயாளி: அவள் பூ விக்கிறான்னு எனக்கு தெரியாதே சார்..
தெரபிஸ்ட்: !!!
மன நோயாளி: சார்.. எனக்கு மல்டிபிள் பெர்சனாலிட்டி டிஸார்டர் இருக்குன்னு நினைக்கிறன்.
தெரபிஸ்ட்: எத்தனை பேர் இருக்காங்க நினைக்கீறிங்க..
மன நோயாளி: ஒரு நான்கு பேர்.
தெரபிஸ்ட்: நர்ஸ், இவர்கிட்ட 4 பேருக்குள்ள பில்லை வாங்கிடுங்க..
மன நோயாளி: !!!












Click it and Unblock the Notifications