கணவரை நம்புங்கள்!
Subscribe to Oneindia Tamil
ஒரு பார்ட்டிக்குப் போய்விட்டு மனைவி கொஞ்சம் மப்பில் இரவு லேட்டாக வீட்டுக்கு வந்தார்.
பெட்ரூமுக்குப் போனவருக்கு அதிர்ச்சி. அங்கே பெட்ஷீட்டுக்கு வெளியே நான்கு கால்கள் நீட்டிக் கொண்டிருந்தன. தனது கணவருடன் வேறு யாரோ பெண் படுத்திருப்பதாக நினைத்து, கிரிக்கெட் பேட் மட்டையைக் கொண்டு வந்து கால்களில் மடார் மடார் என நாலு போடு போட்டுவிட்டு, கிச்சனுக்குப் போனார்.
அங்கே அவரது கணவர் பேப்பர் படித்துக் கொண்டு அமர்ந்திருந்தார். மனைவிக்கோ பெரும் அதிர்ச்சி. நம்ம பெட்ரூம்ல யாருங்க தூங்குறது என்று கேட்டார்.
உன் அப்பா, அம்மா வந்திருக்காங்க. அவங்களை தான் நம்ம பெட்ரூம்ல படுக்க சொல்லி இருக்கேன். அவங்களுக்கு ஹாய் சொன்னியா என்றார் கணவர்.












Click it and Unblock the Notifications