நான் 'அவள்' அல்ல...!
அந்த அழகிய பெண் 17வது மாடியில் உள்ள தனது அபார்ட்மென்ட்டின் பால்கனியில் நின்றிருந்தாள். அப்போது பலமான காற்று வீசவே நிலை தடுமாறி கீழே விழுந்தாள். ஆனால் கடவுள் அவள் பக்கம் இருந்தார். 14வது மாடியின் பால்கனியில் நின்றிருந்த நபர் அந்தப் பெண்ணை தனது இரு கைகளாலும் தாங்கிப் பிடித்தார்.
அந்த நபருக்கு நன்றி கூறினாள் அப்பெண். அதற்கு அந்த நபர், அதெல்லாம் இருக்கட்டும், என்னுடன் உறவு வைத்துக் கொள்கிறாயா என்று கேட்டார். அதைக் கேட்டு கோபமடைந்த அப்பெண், நான் அப்படிப்பட்டவள் இல்லை என்றாள். இதனால் கடுப்பாகிப் போன அந்த ஆண், அவளை அப்படியே கீழே போட்டான்.
பயந்து போன அந்தப் பெண்ணை, 12வது மாடியில் நின்றிருந்த நபர் பிடித்துக் கொண்டார். அந்த நபரும், அவளிடம், உன்னைக் காப்பாற்றியதற்கு நன்றிக் கடனாக என்னுடன் படுக்கிறாயா என்று கேட்டார். சீ நான் அப்படிப்பட்டவள் இல்லை என்றாள் அப்பெண்.
இதைக் கேட்ட அந்த நபரும் பெண்ணை கீழே போட்டான். இப்போது 3வது மாடியில் இருந்த நபரின் கைகளில் வந்து விழுந்தாள் அப்பெண். எங்கே இந்த நபரும் கீழே போட்டு விடப் போகிறானோ என்று பயந்து போன அப்பெண், வா நாம் இருவரும் உறவு வைத்துக் கொள்கிறோம், நான் அப்படிப்பட்ட பெண்தான், என்று வேகம் வேகமாக கூறினாள்.
இதைக் கேட்டு கோபமடைந்த அந்த ஆண், அடச்சே, நீ அப்படிப்பட்டவளா என்று கோபத்தில் கீழே போட்டு விட்டான்....