எப்படி இருக்கும் தெரியுமா...!
Subscribe to Oneindia Tamil
வயதான 3 பெண்கள் அரட்டையடித்துக் கொண்டிருந்தனர். அதில் ஒருவர் மட்டும் கொஞ்சம் தூரத்தில் அமர்ந்திருந்தார்.
சாந்தா - அந்தக் காலத்துல எல்லாப் பொருள் விலையும் ரொம்ப சீப்பா இருந்துச்சு. நான் ஒரு ரூபாய்க்கு இவ்ளோ பெரிய வெள்ளரிக்காயை வாங்குவேன் (வெள்ளரிக்காய் சைஸை கையால் காட்டினார்)
கீதா - உண்மைதான். இப்பல்லாம் வெங்காயம்னு வருதே. அந்தக் காலத்துல ஒரு ரூபாய்க்கு வெங்காயம் வாங்கினா எப்படிக் குண்டு குண்டா இருக்கும் தெரியுமா (இரண்டு வெங்காயம் எப்படி இருக்கும் என்பதை கையால் சைகை செய்து காட்டினார்)
பிரபா - நீங்க என்ன பேசுறீங்கன்னு எனக்குத் தெளிவா கேட்கலே, ஆனா நீங்க யாரைப் பத்தி, எதைப் பத்தி பேசிட்டிருக்கீங்கன்னு மட்டும் தெரியுது என்று சிரித்தபடி கூறினார்!!!












Click it and Unblock the Notifications