குழந்தை நீதி கதைகள்: மணியால் வந்த சோதனை.. பப்புக்கு என்னாச்சு தெரியுமா?
சென்னை: Kids story in Tamil: ஹாய் குட்டீஸ், எப்படி இருக்கீங்க.. யார் வீட்டில் எல்லாம் செல்ல பிராணிகளை வளர்க்கிறீர்கள். எங்க வீட்டில் ஒரு குட்டி பூனை வளர்க்கிறோம். சரி உங்களுக்கு பிடிச்ச செல்ல பிராணி சொல்லுங்க, இல்லை இல்லை எனக்கு பிடிக்காதுன்னு இருந்தாலும் சொல்லுங்க. இப்போ நம்ம கதைக்குள்ள போகலாமா..
ஒருநாள் நல்ல மழை, ராஜன் தனது தோட்ட வேலைகளை முடித்துவிட்டு கிளம்ப வழி பாதையில் சத்தம் கேட்டு அருகில் சென்றான். குட்டியாக மழையில் நனைந்தவாறு நாய் இருக்க அதன் மேல் பரிதாபப்பட்டு ராஜன் தூக்கி கொண்டு வீட்டுக்கு வந்தான். மிகவும் குட்டியாக ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறத்தில் புசு புசு என பார்ப்பதற்கு அழகாகவும் இருந்தது. ராஜனுக்கு மட்டும் இல்லாமல் அந்த பகுதியில் இருந்தவர்கள் எல்லாம் அதை பாசமாக கொஞ்ச ஆரம்பித்தார்கள்.
அதற்கு பப்பு என பெயர் வைக்க, அதுவும் எல்லோரிடமும் ஜாலியாக விளையாட ஆரம்பித்தது. நாட்கள் செல்ல செல்ல பப்பு வளர ஆரம்பித்தது. முன்பு சாதுவாக இருந்த பப்புவின் குணாதிசயம் கொஞ்சம் கொஞ்சமாக மாற ஆரம்பித்தது. ராஜனை தவிர யாரை பார்த்தாலும் பின்னால் சென்று அவர்களுக்கு தெரியாமல் கடிக்க ஆரம்பித்தது.
அதிலிருந்து ராஜனின் வீட்டிற்கு வர யோசித்தார்கள். ஆனால் ராஜனுடன் வியாபாரம் செய்பவர்கள் பயந்து பயந்து வந்தார்கள். பலரும் ராஜனிடம் இதற்கு ஏதாவது தீர்வு இருந்தால் நல்லது என கேட்க, ஆட்டு குட்டி கழுத்தில் கிடந்த மணியை எடுத்து பப்புவின் கழுத்தில் கட்டினார் ராஜன். பப்புவும் ஏதோ பெரிய பதக்கம் கிடைத்தது போல மகிழ்ச்சியில் துள்ளி குதிக்க மணியின் சத்தம் தெளிவாகவே எல்லோர்க்கும் கேட்டது.
அதிலிருந்து ராஜனின் வீட்டிற்கு வருபவர்கள் உஷாராக ஆரம்பித்தார்கள். மணி சத்தம் கேட்டாலே பப்பு வருகிறது என தெரிந்து கொண்டார்கள். அதன் பிறகு பப்புவால் யாரையும் கடிக்க முடியவில்லை. பப்பு அருகில் வரும் சத்தம் கேட்டதுமே எல்லோருமே ஒதுங்க ஆரம்பித்தார்கள். பப்புக்கு அவர்களின் பாசம் கிடைக்காததால் சோகமானது.

சரி, அவர்கள் தான் தன்னிடம் விளையாடவோ கொஞ்சவோ செய்யவில்லை என்பதை புரிந்து கொண்ட பப்பு மற்ற நாய்களுடன் சென்று விளையாடலாம் என முடிவெடுத்து அங்கிருந்த நாய் கூட்டத்திற்குள் ஜாலியாக உள்ளே நுழைய அதில் இருந்ததில் ஒரு பெரிய நாய் பப்புவை பார்த்து கோவமாக கத்தியது. எதுவும் புரியாத பப்பு என்கூட விளையாட வரமாட்டீங்களா என கேட்டது.

மேலும், பாத்தீங்களா என்கிட்ட மணி இருக்கு.. உங்கள்ல யார்கிட்டயாச்சும் இருக்கா? நான் தான் உங்களை விட கெத்து, அதான் எனக்கு மணி எல்லாம் போட்ருக்காங்க.. சரி வாங்க விளையாடலாம் என கேட்டது. மீண்டும் கோபப்பட்ட அந்த பெரிய நாய், முதலில் கூட்டத்தில் இருந்து தள்ளி நில். அப்புறம் இது ஒன்னும் உன்ன பெருமைபடுத்த மாட்டவில்லை. உன் தொல்லை தாங்காமல் நீ வந்தால் பாதுகாப்பாக இருக்க ராஜன் மாட்டியுள்ளார் என சொன்னதும் சோகமானது பப்பு. அது மற்றவர்களை எந்த அளவுக்கு தொல்லை கொடுத்துள்ளது என்பது அப்போதுதான் புரிய வந்தது. அதில் இருந்து யாரிடமும் வம்புக்கு போகாமல் பாசமாக பழகியது பப்பு.
ஆகையால் சுட்டீஸ் ஒருவரிடம் இருந்து அதிகப்படியான சலுகைகளை எதிர்பார்த்தால் அது பின்னாளில் நமக்கே வினையாக முடியலாம்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications