குழந்தை நீதி கதைகள்: இப்படி ஒரு வாழ்க்கையா? அலுத்து கொண்ட முயல்கள்!
சென்னை: Kids story in Tamil: ஹலோ குட்டிஸ், எப்படி இருக்கீங்க.. பள்ளிக்கு போக யாருக்கெல்லாம் பிடிக்கும். இல்லை இல்லை ஒரே பரீட்சை, வீட்டு பாடம் என யாருக்கெல்லாம் வெறுப்பாக இருக்கும். அப்படி வெறுப்பா இருந்தா கொஞ்சம் இந்த கதையை படிச்சிட்டு ஜாலியா படிக்க ஆரம்பிங்க. இப்போ கதைக்குள்ள போலாமா..
தலை தெறிக்க ஒரு முயல் காட்டுக்குள் ஓடி வர, பின்னால் ஏதோ ஒரு மிருகம் விரட்டுவது போல மரம், செடி, கொடிகள் ஆட முயல் ஒரு இடத்தில் நின்று அதன் கூட்டத்தை அழைக்கிறது. உயிரை கைல பிடிச்சிட்டு ஓடி வந்திருக்கேன். என்னால் இப்படி பயந்தெல்லாம் வாழ முடியாது என கத்துகிறது.

முயல் இப்படி கத்தி கூச்சலிடுவதை கேட்ட மொத்த முயல் கூட்டமும் பதறி போய் வெளியில் வந்தன. ஓடி வந்த முயல் கூச்சல் இட்டு கொண்டிருக்கும்போதே இன்னொரு முயலும் தலை தெறிக்க ஓடி வர அதன் கழுத்து மற்றும் கால்களில் ரத்தம் கொட்டியது. அதற்கு மருந்து கொண்டு வந்து கொடுப்பதற்குள் அது இறந்தும் போனது. இதை பார்த்து கொண்டிருந்த தலைவன் இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்ன செய்யலாம் என தனது கூட்டத்தை பார்த்து கேட்டது.
ஆளுக்கொரு யோசனை சொல்ல, எதுவும் தலைவருக்கு சரியாக தோன்றவில்லை. முதலில் ஓடி வந்த முயல் இதெல்லாம் சரியாக வராது. நாம் இருந்தால் தானே இவர்கள் நம்மை கொல்ல துடிப்பார்கள். நாமும் உயிரை கையில் பிடித்து கொண்டு ஓட வேண்டாம் என சொல்ல மத்த முயல்களும் ஆமாம் நாம் என் வாழ வேண்டும், மற்றவர்களுக்கு இரையாக வேண்டும். தினம் தினம் உயிருக்காக போராட வேண்டும் இதற்கு நாம் அனைவரும் இறப்பதே சிறந்த வழி என ஒன்றாக முடிவெடுக்க, தலைவரும் சரி என ஏற்று கொள்கிறார்.
சரி அப்போ நாளை காலை எல்லோரும் ஒன்றாக சேர்ந்து அருகில் இருக்கும் குளத்தில் விழுந்து இறக்கலாம் என முடிவு செய்து, ஒரு கூட்டமே கிளம்பியது. குளத்தை நோக்கி வேகமாக படையெடுக்க செடி கொடிகள் அசைய, அந்த இடமே பயங்கர சத்தத்துடன் அதிர ஆரம்பித்து.
குளத்தின் அருகில் கூட்டமாக பேசி கொண்டிருந்த தவளைகள் ஏதோ பயங்கரமான விலங்கு கூட்டம் வருகிறது போல என பயந்து வேடிக்கை பார்த்து கொண்டிருக்க, முயல் கூட்டத்தின் இந்த செயல் அங்கிருந்து சின்ன சின்ன உயிரினங்கள் அனைத்தையும் பயந்து தலை தெறிக்க ஓட வைத்தது. கூட்டமாக பேசி கொண்டிருந்த தவளைகள் குளத்தில் வேகமாக குதிக்க ஆரம்பித்தன. இதனால் குளத்தில் இருந்த மீன்கள் வேகமாக ஆழமான இடத்திற்கு சென்றன.

இதை பார்த்த முயல் கூட்டத்தின் தலைவன் ஒரு நிமிடம் அதிர்ச்சி ஆகினான். தனது கூட்டத்தை ஒரு நொடி நிற்க சொன்னான். குளத்தின் அருகில் இருந்த சிறு உயிரினங்கள் உயிரை கையில் பிடித்து கொண்டு தாங்கள் ஓடியதை போலவே இருந்ததை உணர்ந்தது.
தனது கூட்டத்திடம், நாம் எந்த உயிருக்கும் இதுவரை பாதிப்பை ஏற்படுத்தியது இல்லை. ஆனாலும் அவை நம்மை பார்த்து பயப்பட ஆரம்பித்தன. ஆக இதுதான் வாழ்க்கை. இதை வாழ நாம் அன்றாடம் ஓடியாக வேண்டும். நாம் மட்டுமில்லை இங்கு வாழும் அனைவருமே ஓடியாக வேண்டும். அப்படியென்றால் இருக்கும் இந்த நொடியை நாம் அனுபவித்து சந்தோசமாக வாழ வேண்டும் என்று தலைவர் கூறியதும் முயல்களுக்கு தாங்கள் தவறான முடிவை எடுத்தது புரிந்தது. அது போல இறப்பு எதற்கும் தீர்வு கிடையாது என்பதையும் புரிந்து கொண்டன.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications