Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குழந்தை நீதி கதைகள்: ஒத்த வார்த்தை பேசாத இளவரசி.. பரிசு அறிவித்த அரசர்..

Subscribe to Oneindia Tamil

சென்னை: Kids story in Tamil: ஹாய் குட்டிஸ், எப்படி இருக்கீங்க.. ஸ்கூல் போக ஆரம்பிச்சிட்டீங்களா? புது நண்பர்கள் யாருக்காவது கிடைத்தார்களா, உங்களுடன் பேச தயங்கினார்களா அப்படி என்றால் விரைவில் அது சரியாகி உங்களுடன் நல்ல நண்பர்களாக மாறுவார்கள். நம்ம கதையை படிக்க போலாமா..

ராஜ்ஜியம் ஒன்றில் அரசருக்கு மனைவியும் ஒரு மகளும் இருந்தார்கள். இளவரசி சிறுவயதில் சேட்டைகள் செய்து சுட்டியாக இருந்தவள், திடீரென ஒரு விபத்தில் பேசாமல் அமைதியாக ஆனாள். அவள் ஒரு வார்த்தை கூட பேசாமல் அமைதியாக இருந்தது அரசருக்கும், ராணிக்கும் மிகுந்த வேதனையாக இருந்தது.

Kids stories kids story wild stories children stories tamil story child

மகளை பேச வைக்க ராணி பல முயற்சிகள் செய்து பார்த்தும் எதுவும் பலனளிக்கவில்லை. இப்படியே போனால் மகளுக்கு பேச்சு வராமல் போய்விடும் என கவலைபட்டார். அரசரிடம் இதை பற்றி கலந்து ஆலோசித்தார். அரசர் தனது மந்திரி சபையில் அமைச்சர்களுடன் பேசி இதற்கான தீர்வை கேட்டார். அமைச்சர்கள் ஆளுக்கொரு யோசனை கொடுத்தார்கள். ஒருவர் மட்டும், நமது மக்களுக்கு இந்த வாய்ப்பை கொடுக்கலாம் என்றார்.

நமது நாட்டின் பிரஜைகள் யாராவது இளவரசியை பேச வைத்து விட்டால், அவர்களுக்கு சன்மானம் கொடுக்கலாம் என்றார். அரசரரும் அதை எற்றுக் கொண்டு தனது மகளை பேச வைப்பவர்களுக்கு பொன் மூட்டை கொடுக்கப்படும் என்றார். மக்கள் தினமும் வரிசையாக வந்து இளவரசியை பேச வைக்க முயற்சி செய்தார்கள்.

எதுவும் ஒத்துவரவில்லை, அரசரும் இது குறித்து கவலையாக இருந்தார். அப்போது வயதான பெண்மணி ஒருவர் வாயிற் காவலாளியிடம் சண்டை போட்டு கொண்டிருந்தார். இது அரசரின் காதுக்கு வர, என்ன பிரச்சனை என அவரே நேரில் சென்று பார்த்தார். அந்த வயதான பெண்மணி கையில் ஒரு கோழி இருந்தது. அரசர் என்னம்மா என்ன பிரச்சனை என்று வினவினார்.

இளவரசியை பேச வைத்து, சன்மானம் வாங்கி செல்ல வந்தேன் என்றார் அந்த பெண்மணி. அம்மா, உங்களை விட இளமையானவர்கள் பலரும் வந்து அவரை பேச வைக்க முயற்சி செய்தார்கள், ஆனால் அவர்களாலேயே முடியாத போது நீ எப்படி இதை செய்வாய் என்றார் அரசர். வயதான பெண்மணியோ என்னால் முடியும் என்றார். அரசரும் அவரது விடா முயற்சிக்காக சரி உள்ளே வாருங்கள் என அனுமதி அளித்தார். அவர் கொண்டு வந்த கோழியுடன் அரணமனைக்குள் நுழைந்தார்.

Kids stories kids story wild stories children stories tamil story child

இளவரசியை காண செல்லும் முன் அந்த கோழியை தூக்கி தனது தலையில் வைத்தார். இளவரசியிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தார் அந்த பெண்மணி. அவர் கேட்ட எந்த கேள்விக்கும் இளவரசி வாயை திறக்கவில்லை. ஆனாலும் விடாத அந்த பெண்மணி இளவரசியின் முன்னால் அங்கும் இங்கும் நடந்தார். இளவரசியோ அந்த கோழியையே வெறிக்க பார்த்தார்.

சிறிது நேரத்தில் கோழி சத்தம் எழுப்பி முட்டை ஒன்றை போட்டது. அது கீழே சத்தமாக விழுந்தது. அதையே கவனித்து கொண்டிருந்த இளவரசி அந்த பெண்மணி கேட்ட எந்த கேள்வியிலும் கவனம் செலுத்தவில்லை. இதை ஆச்சரியமாக அரசர் கவனித்து கொண்டிருந்தார்.

இவ்வளவு நடந்தும் வயதான பெண்மணி எதையும் பொருட்படுத்தாமல் இளவரசியிடம் கேள்விகளை தொடுத்துக்கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த இளவரசி, உங்கள் தலையில் கோழி இருக்கிறது அது உங்களுக்கு தெரியுதா இல்லையா? முதலில் அதை கவனியுங்கள் என்று சத்தமாக கத்தினார். அரசர் மகிழ்ச்சியில் குதிக்க ஆரம்பித்தார்.

பேசவே பேசமாட்டாள் என எண்ணிய தன் மகள் சத்தமாக பேசியதை பார்த்து சந்தோஷத்தில் துள்ளி குதித்தார். அந்த வயதான பெண்மணிக்கு அறிவித்ததை விட அதிகமாக பொன் மூட்டைகளை கொடுத்தார். உங்கள் உருவத்தை வைத்து உங்களை குறைவாக மதிப்பிட்டு விட்டேன் என்னை மன்னியுங்கள் என்றார். வயதான பெண்மணி பரிசுகளை பெற்று கொண்டு மகிழ்ச்சியாக சென்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+