பீப்பி ஊதுனது போதும் கோப்பால்.. ஆடிதள்ளுபடி முடியறதுக்குள்ள எனக்கு ஒரு பட்டுச்சேலை வாங்கி கொடுங்க !
சென்னை: ஒரு வழியாக ஆடி மாதம் முடிந்து நாளை ஆவணி பிறக்கப் போகிறது. இதை நினைத்து புதுமணத் தம்பதிகள் ஒருபுறம் குஷியாக இருக்க, இனி வரிசையாக திருமணம், காதுகுத்து எனப் பத்திரிகைகள் குவியுமே.. அதற்கு மொய் வைக்க வேண்டுமே என இன்றே மீம்ஸ் போட்டு கவலைப்படத் தொடங்கி விட்டனர் மக்கள்.
ஆடி மாதம் என்றாலே புதுமணத் தம்பதிகளில் இருந்து பழைய தம்பதிகள் வரை கொஞ்சம் ஆடித்தான் போவார்கள். பிரித்து வைத்து விடுவார்கள் ஒரு மாதத்திற்கு என்ற கவலை புதுமணத் தம்பதிகளுக்கு சரி.. பழைய தம்பதிகளுக்கு என்ன கவலை என நீங்கள் நினைக்கலாம். சரி, ஒரு மாதம் கல்யாணம், காதுகுத்து என யாரும் வந்து பத்திரிகை வைக்க மாட்டார்கள், மொய்க்கென தனியாக பட்ஜெட் போட வேண்டாம் என நினைத்தால், ஒவ்வொரு கடையும் ஆடித்தள்ளுபடி என்ற பெயரில் புதிய வலையை விரித்து விடுவார்கள். வேறு வழியே இல்லாமல் இந்த தள்ளுபடியிலேயே சம்பளம் பாதி தள்ளுபடி ஆகி விடும்.

அதனாலேயே புதுமணத் தம்பதிகளைப் போலவே மற்றவர்களும் எப்போது ஆடி மாதம் முடியும் என எதிர்பார்த்து வந்தனர். அவர்கள் எதிர்பார்த்தது மாதிரியே இன்றோடு ஆடி முடிந்து, நாளை ஆவணி மாதம் பிறக்கிறது. பிறகென்ன தங்கள் சந்தோசத்தை மீம்ஸ் போட்டு கொண்டாடத் தொடங்கி விட்டனர் சமூகவலைதளப் பக்கங்களில். ஆனாலும் அடுத்து ஒவ்வொருவராக கல்யாணம், காதுகுத்து என பத்திரிகையோடு வரிசை கட்டி நிற்பார்களே என்ற கவலையும் இருப்பதால், அதையும் சைடுகேப்பில் மீம்ஸ்களாக்கி இருக்கின்றனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...






















Click it and Unblock the Notifications