சும்மா யாரும் என்னை தொறந்து பார்க்க வேணாம்.. உனக்கெல்லாம் யாரும் மெசேஜ் பண்ண போறதில்ல!
சென்னை : செல்போன்களை வைத்து விதவிதமான நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து சமூகவலைதளப் பக்கங்களைக் கலகலக்க வைத்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
முன்பெல்லாம் தனிமை விரும்பி என்பவர்கள், எந்தவிதமான தொலைத்தொடர்பு கருவிகளும் இல்லாத, ஆட்கள் இல்லாத இடங்களில்தான் பொழுதைக் கழிக்க விரும்புவார்கள். ஆனால் இப்போதோ நிலைமையே தலைகீழ். ஆயிரம் பேர் கூடி இருக்கும் விழாக்களில்கூட, கையில் செல்போன் இருந்துவிட்டால், அவர்கள் தனிமை விரும்பிகள் ஆகி விடுகின்றனர்.
யாரும் நமக்கு மெசேஜ் அனுப்ப மாட்டார்கள் எனத் தெரிந்தே, அடிக்கடி வாட்சப், இன்ஸ்டாகிராம் என சமூகவலைதளப் பக்கங்களில் எட்டிப் பார்த்துக் கொண்டே இருப்பவர்களும் உண்டு. அதோடு தாங்கள் வைத்த ஸ்டேட்டஸ்களை மற்றவர்கள் பார்ப்பதைவிட, அவர்களே அடிக்கடி திறந்து பார்த்துக் கொள்ளும் பழக்கமும் நம்மில் பலருக்கு உண்டு.
முன்பெல்லாம் கீழே விழுந்தால், கை, கால்களில் அடிபட்டுள்ளதா என்றுதான் பார்ப்பார்கள். ஆனால் இப்போதெல்லாம் அப்படியில்லை, உடனே செல்போனிற்கு என்னவாயிற்று என்றுதான் செக் செய்கிறார்கள்.
இப்படியாக மொபைலும் கையுமாக சுற்றுபவர்களைக் கலாய்த்து விதவிதமான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நம் குறும்புக்கார நெட்டிசன்கள். இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...






















Click it and Unblock the Notifications