முழுசா சந்திரமுகியாக மாறியிருக்கிற சென்னையை பாருங்க.. இன்று தான் ஆரம்பமே
சென்னை: கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவ மழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், சென்னை முழுசாக இன்று தான் சந்திரமுகியாக மாறி உள்ளது. இத்தனை நாள் பார்த்த சென்னைக்கும் இன்றும் பார்க்கும் சென்னைக்கும் நிறைய வேறுபாடு உள்ளது.
சென்னையில் வடகிழக்கு பருவ மழை ஆரம்பித்துவிட்டது. சென்னையில் செங்கல்பட்டு தொடங்கி ஆவடி வரையிலும், பூந்தமல்லிதொடங்கி மெரினா வரையிலும் மழை வெளுத்து வாங்க ஆரம்பித்துவிட்டது. சென்னையில் இன்று தான் மழை ஆரம்பித்துள்ளது.

தென்சென்னையில் புயல் தீவிரமடைந்துள்ளது. கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வீட்டுக்குள்ளேயே பாதுகாப்பாக இருக்குமாறு வானிலை நிலவரம் குறித்து ட்விட்டரில் பதிவிடுவோர் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் காலையிலேயே மழை பெய்த காரணத்தால் பள்ளிக்கு சென்ற மாணவர்கள் அவதிக்கு உள்ளாகினர். பல குழந்தைகள் சரியான நேரத்திற்கு பள்ளிக்கு போக முடியவில்லை. இதேபோல் அலுவலகம் செல்வோர் போக முடியாத அளவிற்கு மழை பெய்து வருவதால் மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகினர்.
சென்னையில் மடிப்பாக்கம், துரைப்பாக்கம், விமான நிலையம், ஈக்காட்டுத்தாங்கல், வடபழனி, அம்பத்தூர், பாடி, முகப்பேர், வில்லிவாக்கம், திருமங்கலம், மதுரவாயல், கோயம்பேடு என சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. மழை அதிகமாக பெய்துவரும் காரணத்தால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி வருகிறது. அதேநேரம் சில சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் தேவையின்றி வெளியில் சுற்ற வேண்டாம்.

சென்னை நங்கநல்லூர் உள்பட பல்வேறு பகுதிகளில் மாநகராட்சி எடுத்த நடவடிக்கை காரணமாக , அங்கு மழை நீர் தேங்கவில்லை. சென்னையின் பல்வேறு சாலைகளிலும் தண்ணீர் பெரியஅளவில் தேங்கவில்லை.. முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால் வெள்ள நீர் பாதிப்பு குறைவாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதனிடையே சென்னையில் மழை பெய்து வரும் நிலையில், வெள்ளம் வெளியேற சில இடங்களில் வழி இல்லாத நிலையும் உள்ளது. அதை பற்றி மீம்ஸ்களும் பரவி வருகின்றன.


மழை குறித்து சென்னை மாநகராட்சி புகார் எண்: இதனிடையே சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழை காரணமாக ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்கள் புகார் அளிக்க சிறப்பு தொலைபேசி எண்களை மேயர் பிரியா அறிவித்துள்ளார். இதன்படி, 1913, 04425619204,04425619206, 04425619207 ஆகிய எண்களுக்கு அழைத்து மக்கள் தங்கள் புகார்களை பதிவு செய்தால் உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications