வெயில் அடிச்சாலும் வேர்க்கும்.. மழை பெய்ஞ்சாலும் வேர்க்கும்.. மண்டகோளாறு புடிச்ச ஊரு!
சென்னை: வெயிலால் தகித்துக் கொண்டிருந்த தமிழகத்தில், நேற்று மாலை முதல் மழை ஆங்காங்கே கொட்டி வருவது, பூமியைக் குளிர்வித்திருக்கிறதோ இல்லையோ மக்கள் மனதைக் குளிர வைத்திருக்கிறது. 'அடடா மழைடா.. அடை மழைடா..' என இந்த மழையை மீம்ஸ் போட்டு சமூகவலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர் நெட்டிசன்கள்.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுபோல, நெட்டிசன்களைப் பொறுத்தவரை தமிழகத்தின் காலநிலையையே சென்னையை வைத்துத்தான் நிர்ணயிப்பார்கள். சென்னையில் வெயில் அடித்தாலும் அது செய்திதான், மழை கொட்டினாலும் அது செய்திதான். உடனே ஒரு ஹேஷ்டேக்கைப் போட்டு சமூகவலைதளங்களில் டிரெண்ட்டிங் ஆக்கி விடுவார்கள்.
இப்போதும் அப்படித்தான் நேற்று மாலை முதல் சென்னையில் விட்டு விட்டு, கொட்டி வரும் மழையையும் #chennairains என ஹேஷ்டேக் போட்டு கொண்டாடி வருகின்றனர். இந்த மழையால் பூமி குளிர்ந்திருக்கிறதா இல்லை சூட்டை இன்னமும் கிளப்பி விட்டிருக்கிறதா என்பதையெல்லாம் ஓரம் தள்ளி வைத்து விட்டு, வழக்கம்போல் கலகல மழை மீம்ஸ்களால் சமூகவலைதளங்களை குளிர வைத்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
மழை வந்தாலே மாணவர்களுக்கு பள்ளி விடுமுறை எதிர்பார்ப்பு வந்து விடும் என்பதில் ஆரம்பித்து, சென்னைதான் இப்படிக் குளிர்ந்து கிடக்கிறது, மற்ற பல மாவட்டங்களில் மழை சிறு தூறலோடும், பில்டப்போடும் ஏமாற்றி விட்டது என்பது வரை, மழை பற்றிய அனைத்து செய்திகளையும் ரவுண்ட் அப் செய்து மீம்ஸ்களாக்கி இருக்கின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...























Click it and Unblock the Notifications