மழைகூட பரவாயில்லடா.. ஆனா நீங்க கத்துறதுதான்டா அதைவிட பயங்கரமா இருக்கு!
சென்னை : இந்த வாரம் தமிழகத்தின் பல மாவட்டங்களில் பலத்த மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதை வைத்து, இப்போதே மக்கள் வெள்ள நிவாரண நிதி வாங்க வரிசையில் நிற்கத் தொடங்கி விட்டதாக மீம்ஸ் போட்டுக் கலாய்த்து வருகின்றனர் நம் குறும்புக்கார நெட்டிசன்கள்.
இப்பொதெல்லாம் மழை என்றாலே நம் மக்களுக்கு வெள்ளம்தான் உடனே நினைவுக்கு வருகிறது. அந்தளவிற்கு கடந்த ஆண்டுகளில் மழை நமக்கு பயத்தைக் காட்டி விட்டது. அதனாலேயே மழை பற்றிய அறிவிப்பு வருகிறதென்றாலே காரை, பைக்கை எப்படி பத்திரப்படுத்துவது, வீட்டிற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக என்னென்ன பொருட்கள் வாங்கலாம் என்பது வரை சிந்திக்க ஆரம்பித்து விடுகின்றனர்.

இப்படி ஒரு குரூப் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சிந்திக்கிறதென்றால், மற்றொரு குரூப்போ, 'அப்போ வெள்ள நிவாரண நிதி கிடைக்கும்ல..' என அதற்கொரு பட்ஜெட் போட ஆரம்பித்து விடுகின்றனர். ஏற்கனவே கடந்த மாதம் வெள்ள நிவாரண நிதி கிடைத்தால், அதை வைத்தே தீபாவளியை ஓட்டி விடலாம் என இந்த குரூப் பிளான் செய்வதாக மீம்ஸ் போட்டு கலாய்த்தனர் நெட்டிசன்கள்.
அதேபோல் இப்போதும், அடுத்த வாரம் பெய்ய இருக்கும் மழையை வைத்து மீம்ஸ் போட்டு கலாய்க்கத் தொடங்கி விட்டனர். "மழை வரும்னு தான்டா சொல்லியிருக்காங்க.. அதுக்குள்ள வெள்ள நிவாரணநிதி வாங்க க்யூல நிக்குறீங்களே!" என செமையாக கலாய்த்துள்ளனர் மீம்ஸ்களில்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மழை ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...



















Click it and Unblock the Notifications