கொரோனாவுக்கு பயந்து ஊசி போட்டா.. இப்போ ஊசி போட்டதுக்கே பயப்பட வச்சிட்டாங்களே!
சென்னை: கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் மனநிலை இப்போது இப்படித்தான் இருக்கிறது என மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
கொரோனாவால் உலகமே முடங்கிக் கிடந்த காலத்தில், இந்த நோய்க்கு ஏதாவது தடுப்பூசி கண்டுபிடிக்க மாட்டார்களா என மக்கள் ஏங்கித் தவம் கிடந்தார்கள். அதன்பிறகு ஒவ்வொரு நாடும் தடுப்பூசிகளை அறிமுகப்படுத்த, எப்படியாவது கொரோனாவில் இருந்து தப்பித்தால் போதும் என மக்கள் அதனை செலுத்திக் கொண்டார்கள்.

ஆனால், மக்கள் இப்போது கொரோனாவை கொஞ்சம் மறந்து விட்ட நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு, அரிதான பக்க விளைவுகள் ஏற்படலாம் என அதனைக் கண்டுபிடித்த அஸ்ட்ராஜெனெகா நிறுவனமே அதிகாரப்பூர்வமாகக் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மருத்துவர்கள் பல்வேறு விளக்கங்களை அளித்து வரும் நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் மனநிலை எப்படி இருக்கிறது என மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...























Click it and Unblock the Notifications