எல்லோரையும் சந்தோசத்துல மிதக்க வைக்குற ஊர் சார்.. இன்னைக்கு அந்த ஊரே தண்ணீல மிதக்குது!
சென்னை : மற்றவர்களைக் கலாய்க்க மட்டுமல்ல.. சமயத்தில் தங்கள் மனதில் உள்ள கவலைகளை வெளியில் கொட்டவும் மீம்ஸ்களை ஒரு கருவியாகத்தான் நெட்டிசன்கள் பயன்படுத்துகிறார்கள். இப்போதும் அப்படித்தான் பெங்கல் புயலால் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருப்பதை வைத்து மீம்ஸ் போட்டு பீல் பண்ணி வருகின்றனர்.
மழை, புயல், வெள்ளம் என எல்லோரும் மீம்ஸ் போட்டுக் கலாய்த்தாலும், அதனால் நிஜமாகவே பாதிப்பை அனுபவிப்பவர்களுக்கு மட்டும்தான் அதன் தாக்கம் புரியும். இப்போதும் அப்படித்தான் பெங்கல் புயலால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, கார்களை பாலத்தில் பார்க் செய்தல் என ஏகப்பட்ட விசயங்களை வைத்து நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டுக் கலாய்த்தாலும், அது பாண்டிச்சேரி, திருவண்ணாமலை போன்ற இடங்களில் ஏற்படுத்தியுள்ள பாதிப்பு கலங்கத்தான் வைக்கிறது.

பிறகென்ன தங்களது வருத்தத்தையும், இந்த மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மற்றவர்கள் உதவ வேண்டும் என்பதையும் வழக்கம் போல் தங்களது மீம்ஸ்கள் மூலம் வெளிப்படுத்தி வருகின்றனர். உதாரணத்திற்கு, "வெளியூர்ல இருந்து வர்றவங்கள சந்தோசத்துல மிதக்க வைக்குற ஊர் சார்.. இன்னைக்கு அந்த ஊரே தண்ணீல மிதக்குது!" என்பது மாதிரியான மீம்ஸ்களைச் சொல்லலாம்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...





















Click it and Unblock the Notifications