உனக்கு பொங்கல்னு பேரு வைக்கும்போதே தெரியும்டா.. நீ மசமசனு தான் இருப்பன்னு!
சென்னை : மழை ஒருபுறம் விட்டு விட்டு பெய்து கொண்டிருக்க, காற்றும், குளிரும் மக்களை வாட்டி வருவதை வைத்து மீம்ஸ் மழை பொழிந்து வருகின்றனர் சமூகவலைதளப் பக்கங்களில்.
பெங்கல் புயல் கொஞ்சம் கொஞ்சமாகக் கரையைக் கடந்து வரும் நிலையில், சென்னை உட்பட பல கடலோர மாவட்டங்களில் காற்று பலமாக வீசி வருகிறது. இந்த காற்றின் வேகத்தை சமூகவலைதளப் பக்கங்களில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியாக பதிவு செய்து கொண்டிருக்க, "அடேய்.. புயல் வேகத்த பார்த்து ஒழுங்கா சொல்லுங்கடா.. உங்க வண்டி ஸ்பீடா மீட்டர பாத்து சொல்லாதீங்க!" என மீம்ஸ் போட்டு அதனைத் தட்டிக் கேட்டு வருகின்றனர் நெட்டிசன்கள்.
அதோடு, புயல் கரையைக் கடக்க நான்கு மணி நேரங்களுக்கு மேல் ஆகலாம் என்ற தகவலை வைத்து, "உனக்கு பெ(பொ)ங்கல்னு பேரு வைக்கும்போதே தெரியும்டா.. நீ மசமசனு தான் இருப்பன்னு! என கலாய்த்து வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான பெங்கல் புயல் பற்றிய மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...





















Click it and Unblock the Notifications