அக்கௌண்ட்ல இருக்க 3.50 பைசாவுக்கு.. ஆறு டிஜிட்ல பாதுகாப்பு வேற!
சென்னை : சம்பளம் கையில் வர இன்னும் சில தினங்கள் இருக்கிறதே என மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.
மாதத்தின் முதல் வாரம் இப்போதுதான் சம்பளம் வாங்கினோம்.. அதற்குள் காலியாகி விட்டதே எனப் புலம்பும் மக்கள், சம்பளம் போடப் போகிறார்கள் என மகிழ்ச்சி அடைகிறார்களா என்றால், அதுதான் இல்லை. அப்போதும் கையில் காசில்லை என்றுதான் அவர்கள் புலம்புகிறார்கள்.
போதாக்குறைக்கு இப்போதெல்லாம் இந்த இஎம்ஐ ரிமைண்டர்கள் வேறு, ஒரு வாரத்திற்கு முன்பே எஸ்.எம்.எஸ்களில் வர ஆரம்பித்து விடுகின்றன. அதைப் பார்த்ததும் இன்னமும் டென்ஷனாகி விடுகிறார்கள் மக்கள். பிறகென்ன புண்பட்ட மனதை மீம்ஸ் போட்டு அல்லது பார்த்து ஆற்று என சமூகவலைதளப் பக்கங்களுக்கு சென்று விடுகின்றனர்.
இப்போதும் அப்படித்தான், "அக்கௌண்ட்ல இருக்குறது வெறும் 3.50 பைசாதான்.. அதுக்கு ஆறு டிஜிட்ல பாதுகாப்பு வேற!" என கையில் மட்டுமல்ல.. வங்கிக் கணக்கிலும் காசில்லை என்பதை நாசூக்காக மீம்ஸ்களில் புலம்பி வருகின்றனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...
























Click it and Unblock the Notifications