தகுதியானவர்களுக்கு ஒலிம்பிக்கில் பங்கேற்க வாய்ப்பே கிடைப்பதில்லை.. இதைப் படிங்க பாஸ்!
சென்னை: எங்கு பார்த்தாலும் இந்தியா ஒலிம்பிக்கில் சொதப்புகிறது, ஒரு பதக்கம் கூட வாங்க முடியவில்லை என்ற கவலையாக உள்ளது. வருத்தப்படுகிறார்கள்.
இந்த நிலையில் பேஸ்புக்கிலும் தங்களது கவலையையும், ஆதங்கத்தையும் மீம்ஸ்களாக பரப்பி வருகிறார்கள்.
அவற்றில் சில சிரிப்பு ரகம்... சில சீரியஸ் ரகம்.

தகுதிக்கு வாய்ப்பில்லை...
அப்படியாக பேஸ்புக்கில் பார்த்தது தான் இந்த புகைப்படம். இந்தியாவில் தகுதியானவர்களுக்கு ஒலிம்பிக்கில் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்படுவதில்லை என்ற ஆதங்கக் கருத்துடன். உங்க கருத்து என்னவோ?

படி படினு சொன்னவங்க தான்...
இதுவும் உண்மையான ஆதங்கமாகத் தான் படுகிறது. படிப்பிற்கு கொடுக்கப்படுகிற முக்கியத்துவத்தை நம்மில் பல பெற்றோர் விளையாட்டிற்கு தருவதில்லை.

ஓசி கேட்குறாங்களே...
பள்ளி மாணவர்களுக்கு வாரத்தில் கிடைப்பதே, ஒன்றோ அல்லது இரண்டோ பிடி பீரியட்கள் தான். ஆனால், அதையும் சின்சியராக சில ஆசிரியர்கள் தட்டிப்பறித்துச் சென்று விடுவர். பிறகெப்படி மெடல்..?

இது ஜாலி ரகம்..
ஒரேயடியாய் சீரியசாய் யோசித்துக் கொண்டிருந்தால் எப்படி... தங்கம் என்றாலே நம் கண் முன் வருவது பிரபு தானே. பிறகு அவர் இல்லாமல் மீம்ஸ் இருக்குமா.












Click it and Unblock the Notifications