நானும் பார்த்துட்டே இருக்கேன்.. ஒரு தடவைகூட பசங்க போட்டோ போட மாட்டேங்குறீங்களே!
சென்னை : பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கி இருப்பதை வைத்து, அம்மாணவர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்த கையோடு, கூடவே தேர்வுகள் மற்றும் பள்ளி நினைவுகளை வைத்து நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நம் நெட்டிசன்கள்.
மழைக்காலம், வெயில் காலம் மற்றும் குளிர்காலம் மாதிரி நம் பள்ளி மாணவர்களும் ஒவ்வொரு வருடத்தையும் தேர்வுக்காலம், விடுமுறைக்காலம் மற்றும் பள்ளி நாட்கள் காலம் என மூன்று வகையாக பிரித்து வைத்திருக்கிறார்கள். அதிலும் மற்ற இரண்டு காலங்களைவிட இந்த தேர்வுக்காலம் தான் அவர்களுக்கு கொஞ்சம் பிஸியான காலம். அதனாலேயே மார்ச், ஏப்ரல் மாதங்கள் வந்து விட்டாலே தேர்வுப்பயம் வந்து தானாக அவர்களுக்கு ஒட்டிக் கொள்ளும்.
அந்தவகையில் பன்னிரண்டாம் வகுப்புகளுக்கு இன்று பொதுத்தேர்வுகள் ஆரம்பமாகியுள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட பலரும் சமூகவலைதளப் பக்கங்கள் வாயிலாக தேர்வு எழுதப் போகும் மாணவர்களுக்குத் தங்கள் வாழ்த்துகளைப் பகிர்ந்தனர். நம் நெட்டிசன்களும் தங்கள் பங்கிற்கு வாழ்த்துகளைப் பகிர்ந்ததோடு, கூடவே தங்கள் ஸ்டைலில் மீம்ஸ்களையும் பகிர்ந்துள்ளனர்.
கூடவே, "நானும் பார்த்துட்டே இருக்கேன்.. ஒரு தடவைகூட பசங்க போட்டோ போட மாட்டேங்குறீங்களே!" என எப்போது தேர்வு, ரிசல்ட் என எந்தச் செய்தியாக இருந்தாலும், மாணவிகள் புகைப்படங்களை மட்டுமே பகிர்கிறார்களே என்ற ஆதங்கத்தையும் பதிவு செய்துள்ளனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...




















Click it and Unblock the Notifications