உனக்கு நைட்டு மட்டும் குளுகுளுனு இருக்கணும்.. பகல்ல வந்தா நசநசனு இருக்குனு திட்டுவியோ
சென்னை: பெரும் அச்சத்தோடு எதிர்பார்க்கப்பட்ட அக்னி நட்சத்திரத்தை, கோடை மழை வந்து குளிர்வித்து வருவதால் குஷியான நெட்டிசன்கள், தங்கள் மகிழ்ச்சியை மீம்ஸ் போட்டு வெளிப்படுத்தி வருகின்றனர்.
மழைக்காலத்தைவிட மக்களை பெரிதும் அச்சுறுத்துவது வெயில் காலம் தான். ஏனென்றால் மழைக்காலத்தில் வீட்டை விட்டு வெளியில் சென்றால் மட்டுமே அவதி. ஆனால் வெயில் காலத்திலோ வெளியில் செல்பவர்களுக்கு இணையாக வீட்டில் இருப்பவர்களும் புளுக்கத்தை, வியர்வையை, வெக்கையை அனுபவிக்க நேரிடும். அதனால்தான் கோடை காலத்தை நினைத்து, குறிப்பாக அக்னிநட்சத்திர காலத்தை நினைத்து மக்களுக்கு எப்போதுமே ஒரு பயம் இருக்கும்.

ஆனால், கடந்தாண்டு அக்னி நட்சத்திரத்தின் அக்னியை மக்கள் அனுபவிக்காதவாறு, கோடை மழை வந்து குளிர்வித்தது. இந்தாண்டும் அது போல் மழை வந்தால் நன்றாக இருக்குமே என மக்களை பிப்ரவரி, மார்ச் மாதத்திலேயே ஏங்க வைத்து விட்டது வெயில். இப்போதே இப்படி என்றால் மே மாதம் என்ன ஆவோமோ என்ற அச்சம் அப்போதே மக்கள் வந்து விட்டது.
ஆனால், இந்தாண்டும் மக்களை கோடை மழை கைவிடவில்லை. அக்னி நட்சத்திரம் ஆரம்பிப்பதற்கு முன்பிருந்தே, 'இது வெயில்காலமா இல்லை மழைக்காலமா?' என மக்கள் தங்களைத் தாங்களே கிள்ளி பார்த்துக் கொள்ளும் அளவிற்கு சாரல் இருந்தது. இப்போது அதன் அடுத்தகட்டமாக காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயல் என அடுத்தடுத்து மக்களின் மனதிலும் மழையை வார்த்து வருகிறது வானிலை.

இந்த கோடை மழையால் குளிர்ந்து போன நம் நெட்டிசன்கள், வழக்கம் போல் அக்னி நட்சத்திரத்தைக் கலாய்த்து மீம்ஸ் போட ஆரம்பித்து விட்டனர். இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...
















Click it and Unblock the Notifications