இன்னைக்கு ஜில் தண்ணீல குளிச்சிட்டு வெளில போறவங்களுக்கு.. லைப் டைம் செட்டில்மெண்ட்!
குளிர் குறைந்தும் குளிக்க மனம் வராமல் மக்கள் தவிப்பதாக மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
சென்னை: தமிழகத்தில் மெல்ல மெல்ல குளிர் குறைந்து வருகிறது என்றாலும், இன்னமும் குளிப்பதற்கு பலருக்கு மனது வரவில்லை என செல்லமாகக் கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

வெயில் காலத்தில் தினமும் இரண்டு முறைக் குளிப்பவர்கள்கூட, குளிர்காலத்தில் குளித்தே ஆக வேண்டுமா என்ற குழப்பத்தோடுதான் பாத்ரூமிற்குள் நுழைவார்கள். முதல் கப் தண்ணீரை எடுத்து மேலே ஊற்றும் வரை இந்த ஒத்தையா? ரெட்டையா? தொடரும்.

கடந்த மாதம் வரை பகலிலும் குளிர்ந்து கிடந்தது. ஆனால் பிப்ரவரி மாதத்தில் குளிர் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து, இப்போதே மே மாதத்தை நினைத்து பதற வைக்கிறது வெயில். ஆனால் என்னதான் குளிர் குறைந்து வந்தாலும், பலருக்கு இன்னமும் குளிக்க மனது வரவில்லை, குளிர்காலம் மாதிரியே கை, கால்களைக் கழுவிக் கொண்டு வெளியில் சென்று வரலாம் என பிளான் பண்ணுகிறார்கள் என ஜாலியாக மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...

















Click it and Unblock the Notifications