எண்ணெய் கத்தரிக்காய் குழம்பும் தொட்டுக்க முறுக்குமா? அப்போ கொம்பன் களம் இறங்கிட்டானா?
சென்னை: தீபாவளிக்கு சுட்ட முறுக்கை இப்போதே சாப்பாட்டுக்கு தொட்டுக் கொள்ளத் தர ஆரம்பித்து விட்டதாக மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் சமூகவலைதளப் பக்கங்களில்.
தீபாவளி, பொங்கல் என பண்டிகைகள் வருகிறதென்றாலே மக்கள் சந்தோசப்படும் அளவிற்கு, பயப்படும் விசயமும் ஒன்று உள்ளது. அது தீபாவளிக்கு செய்த முறுக்கு, பொங்கலுக்கு செய்த பொங்கல், சாம்பார் என அடுத்த சில நாட்களுக்கு அதுதான் சாப்பாடு மற்றும் தொட்டுக் கொள்ள ஸ்நாக்ஸ் என எல்லாமுமாக மாறி விடும் என்பதுதான்.
இப்போதும் அப்படித்தான், பல வீடுகளில் தீபாவளி முடிந்த மறுநாளில் இருந்து, மதிய சாப்பாட்டிற்கு சாம்பார் தொட்டுக் கொள்ள முறுக்கு, எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு அதற்குத் தொட்டுக் கொள்ள முறுக்கு என ஆரம்பித்து விட்டனர். பிறகென்ன அந்த முறுக்கை சாப்பிட்டபடியே, தங்களது நிலைமையை மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.
முறுக்கோடு நிறுத்திக் கொள்ளாமல், அதிரசத்தைக் கருகிப் போன உளுந்துவடை என்றும், அதை போட்டோ வேறு எடுத்து சமூகவலைதளப் பக்கங்களில் பதிவாகப் போடுகிறீர்களே என்றும் கலாய்த்து வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட தீபாவளி ஸ்பெஷல் இனிப்பு மற்றும் காரம் பற்றிய நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...





















Click it and Unblock the Notifications