வாழ்க்கை கெமிஸ்ட்ரி மாதிரி.. ஒண்ணுமே புரியாது.. காதல் கணக்கு மாதிரி.. வரவே வராது!
சென்னை: மார்ச் மாதம் பிறந்து விட்டதால் தேர்வு பயம் குழந்தைகளைவிட பெற்றோருக்கு அதிகமாகி விட்டது போல, அதனால்தான் பள்ளி, தேர்வுகள், மாணவர்கள் என மீம்ஸ்களில் அதனை வெளிப்படுத்தி வருகின்றனர்.
மார்ச், ஏப்ரல் மாதங்கள் என்றாலே, வெயிலைப் பற்றிய பயத்தைப் போலவே, பள்ளி செல்லும் குழந்தைகள் இருக்கும் வீட்டில் பரீட்சை பயம் வந்து விடும். குழந்தைகளுக்கு பரீட்சை பயம் வருகிறதோ இல்லையோ, பெற்றோருக்கு நிச்சயம் பயம் வந்து தொற்றிக் கொள்ளும். ஒரு வருடம் படித்த படிப்பெல்லாம் வீணாகாமல் இருக்க வேண்டும் என்றால் இந்தப் பொதுத்தேர்வைக் குழந்தைகள் நன்றாக எழுத வேண்டுமே என்ற கவலையில் பெற்றோர்கள் பல அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கி விடுவார்கள்.
பல வீடுகளில் கேபிள் கனெக்சன் கட் செய்யப்பட்டு விடும், சினிமா, பீச், பார்க் என குழந்தைகளை வெளியில் அழைத்துச் செல்வது தற்காலிகமாக நிறுத்தப்பட்டு விடும், வீடுகளுக்கு வரும் விருந்தாளிகளைக்கூட வர வேண்டாம் எனச் சொல்லி விடுவார்கள். ஆனால், இப்படிப்பட்ட நடவடிக்கைகளால் குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்களோ இல்லையோ பெற்றோர்கள்தான் தேவையில்லாமல் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள் என்பது அவர்கள் பகிரும் மீம்ஸ்களைப் பார்த்தாலே தெரிகிறது.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...


























Click it and Unblock the Notifications