
நிறுத்து.. நீ இன்னைக்கு விதவிதமா வாட்சப் ஸ்டேட்டஸ் போட.. எனக்கு மேக்கப் போட்டு விடுற.. அப்டித்தான?
சென்னை: கிருஷ்ண ஜெயந்தி வந்து விட்டாலே எப்படி வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு மேக்கப் போட மக்கள் மறப்பதில்லையோ, அதேபோல் மீமர்களும் அதை குழந்தைகளின் கண்ணோட்டத்தில் கலாய்த்து மீம்ஸ் போட மறப்பதில்லை.
Recommended Video

இந்தியா முழுவதும் வெவ்வேறு பெயர்களில் கோலாகலமாகக் கொண்டாடப்படும் பண்டிகைகளுள் கிருஷ்ண ஜெயந்தியும் ஒன்று. இன்றைய தினத்தில் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு அழகழகாக கிருஷ்ணர் மாதிரியும், ராதை மாதிரியும் வேடம் போட்டு, அதைப் பார்த்து ரசிப்பது பெரியவர்களின் வழக்கம். இதனால் காலை முதல் பெரும்பாலானவர்களின் வாட்சப் ஸ்டேட்டஸ்களில் தங்கள் வீட்டு குட்டி கிருஷ்ணர் மற்றும் ராதைகளின் புகைப்படங்கள் தான் ஆக்கிரமித்துள்ளன.

பெரும்பாலான குழந்தைகள் தங்களுக்கு பொட்டு வைக்கக்கூட விட மாட்டார்கள். ஆனால், திறமைசாலி அம்மாக்களோ எப்படியோ குழந்தைகளை தாஜா செய்து, தங்களுக்குப் பிடித்த மாதிரி வேடம் போட்டு விடுவார்கள். இதுதான், இன்று பெரும்பாலான வீடுகளில் நடைபெறும் காட்சிகள்.

விடுவார்களா மீமர்கள்.. குழந்தைகளின் கண்ணோட்டத்தில் இன்றைய தினம் எப்படி இருக்கும் என தங்களது கற்பனைக் குதிரையைத் தட்டி விட்டு, மீம்ஸ்களாக தெறிக்க விட்டு வருகின்றனர்.

இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்படும் சில நகைச்சுவையான மீம்ஸ்கள் உங்களுக்காக...