இப்பலாம் வர மாட்டேன்.. கரெக்ட்டா நீ ஆபிசுல இருந்து கிளம்பும் போது தான் வருவேன்!
வடகிழக்கு பருவமழை ஆரம்பித்து விட்டதை வைத்து, மீம்ஸ்களாகப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
சென்னை: வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டதை வைத்து, மழையை நினைத்து மகிழ்ச்சி, பயம், ஆதங்கம் என கலவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
மழைக்காலம் வருகிறதென்றால் பள்ளிக் குழந்தைகளும் தினமும் செய்திகள் பார்க்க ஆரம்பித்து விடுவார்கள். ஏனென்றால் திடீர் திடீரென மழை விடுமுறை கிடைக்கும் என்பதால். ஆனால் பெரியவர்களின் மனநிலை இதிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. ஐய்யோ இந்த மழைக்காலத்தில் நசநசவென மழை பெய்து கொண்டே இருக்குமே.. எப்படி வேலைக்காக வெளியில் செல்வது என்ற சலிப்பு இருந்து கொண்டே இருக்கும்.
மழை எல்லோருக்கும் பிடிக்கும்தான் என்றாலும், மழையில் நனைந்து, ஈரத்துணியோடு அலுவலகம் செல்வது, சாலையில் தேங்கும் நீர் போன்றவையே இந்த சலிப்பிற்கு காரணம். மக்களின் இந்த கலவையான மனநிலையை வைத்து, விதவிதமான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
தமிழகத்தில் சில இடங்கள் மழையால் நனைந்து கொண்டிருக்க, மற்ற சில ஊர்களில் வழக்கம்போல் வெயில் காய்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதையும் சேர்த்து, நகைச்சுவையான மீம்ஸ்களால் சமூகவலைதளங்களை ஜில்லென நனைய வைத்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மழை பற்றிய மீம்ஸ்களின் தொகுப்பு இதோ...