காய்ஞ்ச கரும்பை தூக்கி குப்பைல போட்டுடுங்க பாஸ்.. அடி ஒவ்வொண்ணும் இடியாட்டம் விழுது!
பொங்கலுக்கு வாங்கிய கரும்பை வைத்தும், தை மாதத்தை வைத்தும் விதவிதமான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
சென்னை: பொங்கல் முடிந்து ஒரு வாரம் ஆகியும், இன்னமும் வாங்கிய கரும்பு தீரவில்லை என மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.

கடந்த வாரம் இந்நேரம் பொங்கல் பண்டிகையை மக்கள் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். பொங்கல் கொண்டாட்டங்களுக்கு இடையே, செய்து வைத்த பொங்கல் இன்னமும் தீரவில்லை எனவும் சமூகவலைதளங்களில் புலம்பிக் கொண்டிருந்தனர். சரி, பொங்கல் முடிந்து ஒரு வாரம் ஆகி விட்டது, பொங்கலை மறந்திருப்பார்கள் என நினைத்தால், மிச்சமிருக்கும் கரும்பு அவர்களை விடுவதாயில்லை.

பல வீடுகளில் பொங்கல் தீர்ந்தாலும் கரும்பு இன்னமும் தீரவில்லை போலும். எப்போது நொறுக்குத் தீனிக் கேட்டாலும் கரும்பையே சாப்பிடச் சொல்கிறார்களே என சமூகவலைதளங்களில் மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.

இது ஒருபுறம் என்றால், 'காய்ந்த கருப்பை சீக்கிரம் தூக்கிப் போட்டு விடுங்கள்' என அனுபவசாலி கணவர்கள் மற்றவர்களுக்கு மீம்ஸ் மூலம் அறிவுறுத்தி வருகின்றனர். காரணம் அடி ஒவ்வொன்றும் சுரீர் சுரீர் என இடி மாதிரி விழுகிறதாம்.

இப்படி கரும்பை வைத்து ஒரு குரூப் புலம்பிக் கொண்டிருக்க, 'தை பிறந்தால் வழி பிறக்கும் என்றீர்களே.. எங்கேய்யா அந்த வழி?' மற்றொரு குரூப் வித்தியாசமாகப் புலம்பிக் கொண்டிருக்கிறது.

இப்படியாக பொங்கல் முடிந்து ஒரு வாரம் கரும்பை வைத்தும், தை பிறந்ததை வைத்தும் விதவிதமான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர். இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்கள் உங்களுக்காக...















Click it and Unblock the Notifications