அடிக்கிற வெயிலுக்கு மொட்டை மாடில நின்னு சூடா டீ குடிக்கிறவங்க எல்லாம்.. ரொம்ப ரேர் பீஸ் செட்டியார்!
சென்னை: பங்குனி மாதமே இன்னமும் பிறக்கவில்லை அதற்குள் வெயில் இப்படி பல்லைக் காட்டுகிறதே என மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.
வழக்கமாக பங்குனி, சித்திரை மாதங்களில்தான் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதனால் வெயில் அதிகமாக இருக்கும் நேரங்களில், 'பங்குனி வெயில் பல்லைக் காட்டுது' என கிராமங்களில் மக்கள் சொல்வது வழக்கம். ஆனால் இன்னமும் பங்குனி மாதமே பிறக்காத நிலையில், வெயில் இப்போதே இப்படி கொளுத்தி எடுப்பதைப் பார்த்து மக்கள் கொஞ்சம் மிரண்டுதான் போயுள்ளனர்.
மார்ச் மாதமே இப்படி என்றால் ஏப்ரல், மே மாதங்களில் என்ன செய்யப் போகிறோம் என்ற கவலை இப்போதே மக்களுக்கு வந்து விட்டது. வீட்டுக்குள்ளேயே இருக்க முடியாதபடி, இப்போதே புழுக்கம் ஆரம்பித்து விட்டது. குளித்து முடித்து பாத்ரூமை விட்டு வெளியில் வருவதற்குள்ளாகவே வியர்வை மழையில் நனைய வேண்டியதாகி இருக்கிறது.
இப்படி தினமும் வெயிலால் சந்திக்கும் பிரச்சினைகளை, ரசிக்கும்படி அழகான மீம்ஸ்களாக்கி இருக்கின்றனர் நெட்டிசன்கள். இதோ அவற்றில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான வெயில் ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...























Click it and Unblock the Notifications