பகல்ல வேர்வையோட இருக்காங்க.. ராத்திரில போர்வையோட இருக்காங்க.. அம்புட்டுத்தான்!
சென்னை: 'வெயில் காலத்தில் குளுகுளுவென இருந்தால் எப்படியிருக்கும்' என எதிர்பார்த்தபடி, தற்போது வானிலை மாறி விட்டதாக மீம்ஸ் போட்டு கோடைமழையைக் கொண்டாடி வருகின்றனர் நெட்டிசன்கள்.
இது அக்னி நட்சத்திர காலமா அல்லது அக்னி குளுரூட்டி காலமா என நம்மை நாமே கிள்ளிப் பார்த்துக் கொள்ளும்படி, தாராளமாக கோடை மழை தமிழகம் முழுவதும் கொட்டி வருகிறது. பல இடங்களில் மழை இல்லாவிட்டாலும், சொல்லிக் கொள்ளும்படி வெயிலும் இல்லை என்பதால் மக்கள் மகிழ்ச்சியாகவே உள்ளனர். வழக்கம்போல் தங்களது மகிழ்ச்சியை மீம்ஸ்களாகப் பகிர்ந்து சமூகவலைதளப் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

என்னதான் மழை கொட்டினாலும், இந்த ஃபேனுக்கு இப்போதும் ரெஸ்ட் கொடுக்காதவர்களையும் சைடுகேப்பில் நகைச்சுவையாக கலாய்த்துள்ளனர். கூடவே, 'பகல்ல வேர்வையோட இருக்காங்க.. ராத்திரில போர்வையோட இருக்காங்க' என தமிழக வானிலை அறிவிப்பையும் சுருக்கமாக ரசிக்கும்படி மீம்ஸ் ஆக்கியுள்ளனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில கோடை மழை ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...























Click it and Unblock the Notifications