ஈரோடு பக்கம் மட்டும் போய்டாதீங்க.. ரோட்ல நடந்து போகும் போதே உடம்புல நெருப்பு பத்திக்குதாம்!
சென்னை: இந்த வெயில்காலம் எப்போதுதான் முடியுமோ என மக்கள் தவித்துக் கொண்டிருந்தாலும், இந்த வெயில்காலத்தை மட்டுமே நம்பி தொழில் நடத்தி வரும் ஜூஸ் கடைக்காரர்களை வைத்து நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் சமூகவலைதளப் பக்கங்களில்.
மழை, வெள்ளமாக இருந்தாலும் சரி, கடும் வெயிலாக இருந்தாலும் சரி.. எப்போதுமே தலைநகர் சென்னைதான் ஊடகங்களில் பேசுபொருளாக இருக்கும். ஆனால் இந்த முறை ஈரோடு வெயிலும் அதில் சேர்ந்து கொண்டது. நாளுக்கு நாள் அங்கு அதிகரித்து வரும் வெயிலின் அளவால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.
சென்னை, ஈரோடு என வெயில் அதிகம் உள்ள மாவட்டங்களில் மக்கள் எப்படி வாழ்கின்றனர் என்பதை நகைச்சுவையாக, 'ரோட்ல நடந்து போனாலே உடம்பு பத்திக்கிட்டு எரியுதாம்' என மீம்ஸ்களாக்கி இருக்கின்றனர் நெட்டிசன்கள். நிஜமாகவே பற்றி எரியா விட்டாலும், நிஜமாகவே பகலில் வெளியில் தலை காட்டவே பயமாகத்தான் இருக்கிறது.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான வெயில் பற்றிய மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...























Click it and Unblock the Notifications