முன்ன ஞாயிறுனா நமக்கு லீவு.. இப்போ ஞாயிற்றுக்கிழமைக்கே லீவு.. காலம் எவ்ளோ மாறிடுச்சு!
ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருவது பற்றிய மீம்ஸ்களின் தொகுப்பு.
சென்னை: ஞாயிற்றுக்கிழமையென்றால் விடுமுறை என்று நாம் கொண்டாடிய காலம் போய், இப்போது ஞாயிற்றுக்கிழமைக்கே விடுமுறை கொடுத்து விட்டோம் என ஞாயிறு ஊரடங்கை வைத்து மீம்ஸ்கள் பகிரப்பட்டு வருகின்றன.

ஒமைக்ரான் பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக ஞாயிறு முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஞாயிறு என்றாலே நம்மூரில் அசைவப் பிரியர்களுக்கு கறி (சாப்பிடும்)நாள் தான். ஆனால் ஊரடங்கால் கறிக்கடைகள் மூடி இருப்பதால், ஒரு சிலர் முன்கூட்டியே சனிக்கிழமையே கறிக்குழம்பு வைத்து சாப்பிட்டு விட்டனர்.

மற்றொரு குரூப்போ கறியை பிரிட்ஜில் வாங்கி வைத்து, ஞாயிறு சமைக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து விட்டனர். ஆனால் இது இரண்டுக்கும் வாய்ப்பில்லாதவர்கள் இன்று வேறு வழியே இல்லாமல் சைவ சாப்பாடு சாப்பிட்டு வருகின்றனர்.

இப்படி ஞாயிறு ஊரடங்கையும், கறி சாப்பிடுபவர்கள் பற்றியும் சமூகவலைதளத்தில் பல ஜாலி மீம்ஸ்கள் வளைய வருகின்றன. இதோ அவற்றில் சில உங்களுக்காக...












Click it and Unblock the Notifications