குழாயில சுடுதண்ணீ வேணுமா.. அது இருக்கு.. கேஸ் இல்லாம மாடில ஆப்பாயில் போடணுமா.. அதுவும் இருக்கு!
மார்ச் மாதத்திலேயே வெயிலின் கொடுமை அதிகரித்து வருவதை வைத்து நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
சென்னை: வெயிலின் கொடுமை தாங்க முடியாமல் இருப்பதாக மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.
வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில்தான் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால், இப்போதெல்லாம் பிப்ரவரியிலேயே தன் வேலையைக் காட்ட ஆரம்பித்து விடுகிறார் சூரியன். இதனால் 'இப்பவே இப்படினா ஏப்ரல், மே-ல என்ன ஆவோமோ?' என்ற கவலை மக்களுக்கு பிப்ரவரி, மார்ச் மாதங்களிலேயே வந்து விடுகிறது.
இந்தாண்டு பிப்ரவரி மாதத்தில் பகலில் வெயிலும், இரவில் பனியும் என மாறி மாறி காலநிலை இருந்ததால், மக்களால் ஓரளவுக்கு சமாளிக்க முடிந்தது. இப்போது மார்ச் மாதம் பிறந்து பாதி நாட்கள் ஓடி விட்ட நிலையில், பனி குறைந்து வெயில் கொஞ்சம் கொஞ்சமாக தன் கோர முகத்தைக் காட்ட ஆரம்பித்து விட்டது.
வெயிலின் தாக்கத்தால் பகல் நேரங்களில் மக்கள் வெளியில் எங்கும் செல்ல முடியாமல், வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்க வேண்டியதாக இருக்கிறது. இப்படியாக வெயிலால் மக்கள் படும் அவதிகளை ஆண்டுதோறும் மீம்ஸ்களாகப் போட்டு நெட்டிசன்கள் புலம்புவது வழக்கம். இந்தாண்டு வெயிலைப் போலவே தங்களது ஹாட்டான புலம்பல் மீம்ஸ்களையும் மார்ச் மாதத்திலேயே ஆரம்பித்து விட்டனர் நெட்டிசன்கள்.
இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில்பட்ட சில நகைச்சுவையான கோடைகால மீம்ஸ்கள் உங்களுக்காக...




















Click it and Unblock the Notifications