எதுக்குடா டீ கப்பை உடைச்சனு கேட்டா.. புதுசா வரபோற கப்புல குடிக்கதான்னு சொல்றான் சார்!
சென்னை : ஐபிஎல் தொடரின் பைனல்சில் எந்தெந்த அணிகள் விளையாடப் போகிறதென தெரிந்தபின், நம் மீமர்கள் சும்மா இருப்பார்களா? அதுவும் ஆர்சிபி இந்த முறை பைனல்ஸுக்கு வந்துள்ள நிலையில், அது கப் அடிக்க வாய்ப்புள்ளதா என்பதை வைத்து நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து இணையத்தைக் கலகலக்க வைத்து வருகின்றனர்.
கட்நத ஒரு மாதத்திற்கும் மேலாக கிரிக்கெட் ரசிகர்கள் கோலாகலமாக திருவிழா மாதிரி கொண்டாடி வந்த ஐபிஎல் போட்டிகள் நாளையுடன் முடிவடைய உள்ளன. இறுதிப் போட்டியில் ஆர்சிபி அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோத உள்ளன. இந்த முறை ஆரம்பத்தில் இருந்தே ஆர்சிபி அணி சிறப்பாக விளையாடி வந்தது. அதனால் இந்தாண்டு அந்த அணி கப் அடிக்க அதிகம் வாய்ப்பிருப்பதாகப் பேசப்பட்டது.

ஆனால் இடையில் போர்ப்பதற்றம் ஏற்பட்டதால், ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன. ஆர்சிபியின் ராசியால்தான் ஐபிஎல் நிறுத்தப் பட்டதாக அப்போதே அந்த அணியை வைத்து, கலாய்த்து தள்ளினார்கள் நம் மீமர்கள். இதனால் சோகத்தில் இருந்த ஆர்சிபி ரசிகர்களுக்கு, மீண்டும் போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டது மகிழ்ச்சி என்றால், தற்போது அந்த அணி பைனல்ஸ் வரை வந்திருப்பது அதைவிட இரட்டிப்பு மகிழ்ச்சி.
எப்படியும் இந்தமுறை கப் அடித்தே தீருவது என நாளைய ஆட்டத்தை எதிர்பார்த்து அந்த அணி ஒருபுறம் மகிழ்ச்சியில் இருக்க, 'அதெப்படி உங்களை அவ்வளவு ஈஸியாக விட்டு விடுவோமா?' என தங்கள் ஸ்டைலில் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள். 'இவ்ளோ நல்லா பெர்பார்ம் பண்ணி பைனல் வரை வந்து.. கடைசில அதுல தோத்துட்டா என்னடா பண்ணுவீங்க?' என அவர்கள் ஒருபுறம் வன்மத்தைக் கக்க, அவர்களுக்கு பதிலடி தரும் விதமாக, 'எதுக்குடா டீ கப்பை உடைச்சனு கேட்டா.. புதுசா வரபோற கப்புல குடிக்கதான்னு சொல்றான் சார்!' என தங்கள் பங்கிற்கு கலாய்த்து வருகின்றனர் ஆர்சிபி ரசிகர்களும்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...





















Click it and Unblock the Notifications