இன்னும் சில நாட்கள்.. புயல் தாக்கிய அறிகுறியே இருக்காது.. கன்னியாகுமரிகாரங்கடா..!
கன்னியாகுமரியில் ஓகி புயல் பிடுங்கிய வீசிய மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள இளைஞர்களை மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
Recommended Video
சென்னை: கன்னியாகுமரியில் ஓகி புயல் பிடுங்கிய வீசிய மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள இளைஞர்களை மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
கடலில் இருந்துக்கொண்டே கன்னியாகுமரியில் நேற்று கோர தாண்டவம் ஆடியது ஓகி புயல். இதில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் வேறோடு பிடுங்கி எறியப்பட்டன.
இதனால் போக்குவரத்து முடங்கியது. மின்கம்பங்களும் சாய்ந்தன. இந்நிலையில் சாய்ந்து கிடந்த மரங்களை அகற்ற அரிவாளுடன் புறப்பட்டுவிட்டனர். மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள இளைஞர்களை சமூகவலைதளங்களில் மக்கள் பாராட்டி வருகின்றனர்.
செல்போன் சார்ஜ்..
கன்னியாகுமரி, தளவாய்புரம் புனித ஜார்ஜியார் ஆலயத்தில் ஊர் மக்கள் பயன்படும் விதமாக ஆலய நிர்வாகத்தினர் ஜெனரேட்டர் மூலம் செல்போன் சார்ஜ் செய்துகொள்ளும் வசதியை ஏற்படுத்தி கொடுத்திருக்கின்றனர்.
கன்னியாகுமரிகாரங்கடா!!
புயல் வந்ததும் கை கட்டி வேடிக்கை பார்க்கும் சிங்கார ஊர் பசங்கனு நினைச்சிங்களா... புயலே வந்தாலும் அசராம களத்தில இறங்கி வேலை பார்க்கும் கன்னியாகுமரிகாரங்கடா!!
மீண்டு வரும் கல்லுக்கூட்டம்
கல்லுக்கூட்டம் இளைஞர்கள் கடின உழைப்பால் மிக விரைவாக மீண்டு வரும் கல்லுக்கூட்டம் ஊர்.
உங்களை போன்ற உழைப்பாளிகள்
குமரியின் வளர்சிக்கு காரணம் அரசு அல்ல உங்களை போன்ற உழைப்பாளிகள் இருப்பதால்
நண்பர்களுக்கு நன்றிகள் பல...,
சுயநலத்தோடு வீட்டுக்குள்ள
ஊரில் வெட்டியா திரியுறானுக வெளங்காத கேஸ்ன்னு ஒதுக்கப்பட்ட பசங்க பூராவும் ரோட்டோரம் மரம் வெட்டி பொது சேவை செய்யுறாங்க..
பேசுனவன் சுயநலத்தோடு வீட்டுக்குள்ள.......
அறிகுறிகள் இருக்காது
ஒற்றுமையாக இருந்து மீண்டெழுவோம்
இன்னும் சில நாட்களில் புயல் தாக்கிய அறிகுறிகள் இருக்காது
மீட்பு பணியாற்றும் அனைவருக்கும் மனம்சார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்..