வெயில் ஓவரா இருக்குனு குளிக்க வந்தா.. குழாயிலும் சுடுதண்ணியா கொட்டுதே!
சென்னை: கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.
அதிகமாக வெயில் அடித்தாலும் சரி, அதிகமாக மழை பெய்தாலும் சரி.. நம் மக்கள் எல்லாவற்றையும் புலம்பத்தான் செய்கிறார்கள். ஆனால் என்ன, மழையைவிட வெயிலுக்கு கொஞ்சம் எக்ஸ்ட்ரா புலம்பல் இருக்கும். காரணம் மழையில்கூட குடையைப் பிடித்துக் கொண்டு, ரெயின் கோட் போட்டுக் கொண்டு வெளியில் சென்று வரலாம். ஆனால் வெயில் அப்படியில்லை.

வீட்டுக்குள் இருந்தாலே வியர்வை, கசகசப்பு என வெயில் படுத்தி எடுத்து விடுகிறது. அதனால் படும் கஷ்டத்தைப் போலவே மக்களிடமும் கொஞ்சம் புலம்பலும் எக்ஸ்ட்ரா ஆகி விடுகிறது. அதிலும் இந்தாண்டு பிப்ரவரி மாதத்தில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகரிக்க ஆரம்பித்து விட்டதால், மார்ச் மாதத்திற்கே இப்படி என்றால், ஏப்ரல், மே மாதங்களை நினைத்தால் கண்ணைக் கட்டிக் கொண்டு வருகிறது என மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் சமூகவலைதளப் பக்கங்களில்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான வெயில் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...






















Click it and Unblock the Notifications