மார்கழி மாசம் பொறந்தாலே சின்ராச கைல பிடிக்க முடியாது.. அவன் ஆள பார்க்க கிளம்பிடுவான்!
சென்னை: டிசம்பர் மாதத்தைக் கலாய்த்தது போதவில்லை என மார்கழி மாதத்தையும் சேர்த்து தற்போது கலாய்க்க ஆரம்பித்து விட்டனர் நம் குறும்புக்கார நெட்டிசன்கள்.
டிசம்பர் மாதம் என்றாலே மழை, புயல், வெள்ளம் என மீம்ஸ் போட்டு கலாய்ப்பது மாதிரி, மார்கழி மாதம் என்றாலே பனி அதிகமாக இருக்கிறது என தற்போது அதையும் தங்களது மீம்ஸ் பட்டியலில் சேர்த்து விட்டனர். ஏற்கனவே, இந்தாண்டு ஆரம்பத்தில் இருந்தே மழையைவிட பனி அதிகமாக இருக்கிறது என மக்கள் புலம்பி வருகின்றனர். இதில் மார்கழியும் பிறந்துவிட, கேட்கவா வேண்டும்.
அதனால்தான், "மார்கழி மாசம் பொறந்தா போதும்.. சின்ராசுக்கு எக்ஸ்ட்ரா ரெக்கை முளைச்ச மாதிரி.. அவ்ளோ வேகமா சுத்துவான்!" என வீட்டில் சுற்றும் ஃபேனில் ஆரம்பித்து, "மார்கழி மாசம் பொறந்தாலே சின்ராச கைல பிடிக்க முடியாது.. அவன் ஆள பார்க்க கிளம்பிடுவான்!" என ரோட்டில் சுற்றும் நாய் வரை விட்டு வைக்காமல் விதவிதமான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...





















Click it and Unblock the Notifications