20ம் தேதி 20 கல்யாணவீடு இருக்கு சார்.. மொய் எழுத லோன் எதுவும் கிடைக்குமா?
சென்னை : தொடர்ச்சியாக திருமணத்திற்கு மொய் எழுத வேண்டி ரிஉப்பதால், யாராவது மொய் எழுத என லோன் கொடுப்பார்களா என மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.
ஆவணி முடிந்தால் அடுத்த முகூர்த்தத்திற்கு புரட்டாசி முடிந்து ஐப்பசி வரைக் காத்திருக்க வேண்டும் என நினைத்தோ என்னவோ, திருமண மண்டபங்களில் முகூர்த்தங்கள் களை கட்டி வருகின்றன. இதனால் ஒரேநாளில் காலையில் இரண்டு திருமணம், மதியம் இரண்டு திருமணம், மாலையில் மூன்று ரிசப்ஷன் மற்றும் நிச்சயதார்த்தம் என மக்களும் படு பிஸியாக உள்ளனர்.

ஆனால் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது மகிழ்ச்சியாக இருந்தாலும், ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் தனித்தனியே மொய் எழுதிதான் கட்டுப்படியாகவில்லை என மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர். மொய் எழுதுவதற்கென்று ஏதாவது வங்கியில் லோன் கிடைக்குமா என மக்கள் யோசிக்கும் அளவிற்கு வீடுகளில் திருமணப் பத்திரிகைகள் குவிந்து கிடக்கின்றன என அந்த மீம்ஸ்களில் யதார்த்தமாக நெட்டிசன்கள் புலம்பி வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...


















Click it and Unblock the Notifications