நீங்கதான் மகிழ்ச்சியையும் வளத்தையும் கிடைக்க விட மாட்றிங்களே ஜீ....!!
பிரதமர் மோடி தமிழ்மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்திருப்பதை வச்சு நெட்டிசன்கள் வச்சு செய்துள்ளனர்.
சென்னை: பிரதமர் மோடி தமிழ் மக்களுக்கு தனது டிவிட்டர் பக்கத்தில் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதனை வச்சு செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
ஏற்கனவே டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை பிரதமர் மோடி கண்டுக்கொள்ளவில்லை என்ற கோவத்தில் உள்ளனர் நெட்டிசன்கள் இந்நிலையில் பிரதமர் மோடி மகிழ்ச்சியும் வளமும் பொங்க வேண்டும் என வாழ்த்து தெரிவித்திருப்பது அவர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதனை வெளிப்படுத்தும் வகையில் கலாய் மீம்ஸ்களை வெளியிட்டுள்ளனர். அவற்றில் சில உங்கள் பார்வைக்கு...
உண்மையான மகிழ்ச்சி கிடைச்சிருக்கும்..!!
தமிழ்ல ட்ரான்ஸ்லேட் பண்ண எடுத்துக்கிட்ட நேரத்த ஒரு மாசத்துக்கு மேல போராடிகிட்டு இருக்குற விவசாயிகளுக்காக ஒதுக்கியிருக்கலாம்... அப்படி நீங்க செங்சிருந்தீங்கன்னா தமிழ்மக்களுக்கு உண்மையான மகிழ்ச்சி கிடைச்சிருக்கும்..!!
எங்கம்மா தர்றாங்க....!!
விவசாயி நிவாரணம் கேட்ட எங்கம்மா தர்றாங்க....!! எல்லாம் பொங்கல் வாழ்த்து, புத்தாண்டு வாழ்த்தோட முடிச்சுக்குறாங்கே.... என்கிறது இந்த மீம்..
விட மாட்றீங்களே ஜீ
நீங்கதான் மகிழ்ச்சியையும் வளத்தையும் கிடைக்க விட மாட்றிங்களே ஜீ... என மோடியை சாடுகிறது இந்த மீம்...
அவருக்கு ஏதும் பிரச்சனையா
நினைத்த பொழுதில் அமெரிக்கா, லண்டன் என வெளிநாடுகளுக்கு பறக்கும் மோடி எட்டிப்பார்க்கும் தூரத்தில் உள்ள போராடும் விவசாயிகளை ஒரு ஐந்து நிமிடம் பார்க்க மாட்டாரா..! ஏன் பார்க்க முடியாது அவருக்கும் ஏதும் பிரச்சனையா - மயில்சாமி சரமாரி கேள்வி