குச்சனூர் கல்வெட்டு குழப்பத்தால்.. குபுகுபுவென குவிந்த மீம்ஸ்கள்!
சென்னை: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ பி ரவீந்திரநாத் குமாரை தேர்தல் முடிவு வருவதற்கு முன்பாகவே எம்பியாக்கி அழகு பார்த்த குச்சனூர் கோவில் நிர்வாகத்தின் அவசர செயல்பாடுகள் இப்போது மீம்ஸ் வரை கொண்டு போய் விட்டன.
தேனி பாராளுமன்ற உறுப்பினர் என்று கல்வெட்டில் பெயரைப் பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்து விட்டனர். இது பெரும் வைரலாகப் போய் இப்போது மீம்ஸ்கள் குவிந்து கொண்டுள்ளன.
தற்போது அந்த பெயரை மறைத்து விட்டதாக செய்திகள் வெளியானாலும் கூட குவியும் மீம்ஸ்களை எப்படித் தடுப்பது என்பதுதான் தெரியவில்லை. அதிலிருந்து சில ஜாலியான மீம்ஸ்கள்.
இந்த மீம்ஸைப் பாருங்கள். அதுக்குள்ள என்னப்பா அவசரம், தப்பா நினைச்சுடப் போறாங்கன்னு பதறுகிறார் இவர்.
#OPS Son's name printed as MP even before the Election Results. This is Indian #IndianDemocrazy 🤔😞 pic.twitter.com/Dtns5h6ovb
— Balaji Chandran (@balajichandran) May 17, 2019
ஓட்டே அடுத்த வாரம்தான் எண்ணப் போறாங்க. அதுக்குள்ள எப்படி இப்படி என்று கேட்கிறது இந்த மீம்ஸ். தீவிரமான பிரச்சாரம், குடும்பத்துடன் ஊர் ஊராக அலைந்து திரிந்து வாக்கு சேகரித்தது என்று ஓபிஎஸ் குடும்பமே ரவீந்திரநாத் குமாருக்காக வாக்கு சேகரித்தது. ஆனால் கோவில் நிர்வாகத்தின் அவசரக்குடுக்கை நடவடிக்கையால் ஓபிஎஸ்ஸுக்கு பெரும் கெட்ட பெயராகி விட்டதாக பெரியகுளம் மக்கள் பேசிக் கொள்கிறார்கள்.