ஆடியே முடிய போகுது.. இவன் கவலையை பாத்தியா!
சென்னை: ஆடி மாதம் முடிவுக்கு வரப் போகிறது என்பதில் பலருக்கும் ஒரு வித நிம்மதி! குறிப்பாக புதுமண தம்பதிகளுக்கு இது பெரும் நிம்மதியாக இருக்கும். பாரம்பரியமாக, இந்த மாதத்தில் மணமகளை அவளது தாய்வீட்டிற்கு அழைத்துச் செல்வது இன்று வரை பல குடும்பங்களில் பின்பற்றப்படும் நடைமுறையாக இருந்து வருகிறது. இதனால், திருமண வாழ்க்கையை ஆரம்பித்திருக்கும் புதுமாப்பிள்ளைகளுக்கு, முதல் மாதத்திலேயே பிரிவு என்ற சோதனை.
ஆடி மாதம் வந்தால் சந்தோஷப்படுவோர் இரண்டு பேர்கள் தான். பெண்கள் மற்றும் பழைய மாப்பிள்ளைகள்! பெண்களுக்கு இது ஷாப்பிங் சீசன். எங்கு ஆடி ஆஃபர்கள் கிடைக்கும் என்று தேடி தேடி பொருட்கள் வாங்கும் உற்சாகத்தில் இருப்பார்கள். பழைய மாப்பிள்ளைகளுக்கு? "குறைந்தபட்சம் பத்து நாளாவது பொண்டாட்டி இல்லாம நிம்மதியாக இருக்கலாம். புதுமாப்பிள்ளைகள் மட்டும் தான் கணக்கை எண்ணி, நாட்களை கடத்திக் கொண்டிருப்பார்கள். இனி சில நாளில் ஆடி முடிவுக்கு வரப்போகிறது. அதனால், புதுமாப்பிள்ளைகள் படு குஷியில் இருக்கிறார்கள்.
சமூக ஊடகங்களில் கூட 'ஆடி பிரிவு' குறித்த மீம்ஸ்களும் அனுபவங்களும் நகைச்சுவையாக பரவிக் கொண்டிருக்கின்றன.




















Click it and Unblock the Notifications