அடி வாங்குனது நானு.. கோப்பை எனக்கு தான் சொந்தம்.. கொஞ்சம் இப்படி சூடு கண்ணா!
சென்னை: ஆசியா கோப்பை போட்டிகள் ரொம்ப பரபரப்பாக அமைந்துள்ளன. இந்தியா, பாகிஸ்தான், ஸ்ரீலங்கா, பங்களாதேஷ் அணிகள் தங்கள் முழு திறமையுடன் களத்தில் இறங்கி, ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளன. சமீபத்திய ஆட்டங்களில் பாகிஸ்தான் ஒரு அதிரடி வெற்றியை பதிவு செய்து, எதிரிகளை வியக்க வைத்தது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் நேர்கொண்ட நேர்முக ஆட்டங்கள் ரசிகர்களுக்கு ஒரு த்ரில்லிங் ரைடாக இருந்தது.

இந்தியாவின் முன்னணி வீரர்கள் தங்கள் ஆட்டத்தால் ரசிகர்களை கவர்ந்துள்ளனர், சிலர் அதிரடி ரன்கள், சிலர் கிளட்ச் பந்துகள் மூலம் ஆட்டத்தை மாற்றியுள்ளனர். இந்த வெற்றியை மேலும் பரபரப்பாக மாற்றியது இந்தியா வீரர்கள் கைகுலுக்காமல் சென்றது. அதன் பின் பாகிஸ்தான் கேப்டன் பரிசு தொகையை தூக்கி எறிந்தது, அதோடு கிரிக்கெட் கவுன்சிலின் தலைவர் பாகிஸ்தானி என்பதால் அவர் கையோடு கப்பை தூக்கி சென்றது என போட்டியின் ஒவ்வொரு நொடியும் ஒரு திரில்லர் படத்தை போல இருந்தது. இந்தியா வீரர்கள் கையில் கப்பே இல்லாமல் கப் வைத்திருப்பது போல நடந்து வந்தது என சின்ன சின்ன சேட்டைகள் செய்து ரசிகர்களுக்கு ஒரு அனுபவத்தை கொடுத்தார்கள்.
இதோடு நம் இந்திய வீரர்களும் விடாமல் சமூக வலைத்தளங்களில் டீ கப், இமோஜி கப் என அவர்கள் அருகில் வைத்து கொண்டு சேட்டை செய்து வருகிறார்கள். இதுதான் இப்பொது இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. மீம்ஸ் க்ரியேட்டர்களும், இந்த ட்ரெண்டில் குதித்து கன்டென்ட் கொடுத்து வருகிறார்கள்.



















Click it and Unblock the Notifications