இவனுக்கு ஒரு சீட்டு எடுத்து போடுங்க.. பூரா பொய்யா பேசுறான்!
சென்னை: நம்ம ஊரில் பிறந்த குழந்தையிலிருந்து வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் ஜாதகமும் ஜோதிடமும் முக்கிய பங்காற்றுகின்றன. எதிர்காலத்தை கணிக்கக் கூடிய எளிய வழி என்ற நம்பிக்கையுடன் பலர் இதனைப் பயன்படுத்துகிறார்கள். குழந்தையின் பெயரிடுதல் முதல் கல்வி, திருமணம், தொழில், வீடு வாங்குதல், வெளிநாடு போகும் ஆசை என அனைத்திற்கும் ஜோதிடத்தின் துணை தேவைப்படுகிறது.
முன்பு நம் பாட்டி, தாத்தாக்கள், பெற்றோர்கள் தான் ஜோதிடத்தில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார்கள். "ஜோதிடரிடம் சென்று பார்த்தால் நல்லது நடக்கும்" என்ற நம்பிக்கை அவர்களுக்குள் ஆழமாக இருந்தது. ஆனால் இந்த நம்பிக்கை காலத்தோடு குறையாமல், புதிய வடிவத்தில் இன்று கூட நமது வாழ்வில் இடம்பிடித்திருக்கிறது.

உடல்நலனில் இருந்து வீடு வாங்குவது வரை, தொழில் முன்னேற்றம் முதல் குடும்பத் திட்டங்கள் வரை, மக்கள் ஜோதிடத்தை அடிப்படையாகக் கொண்டு முடிவெடுக்கிறார்கள். எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சிக்கல்களைத் தவிர்க்கவும், நல்ல நேரங்களை பயன்படுத்திக்கொள்ளவும் ஜோதிடத்தின் வழிகாட்டுதலே சிறந்தது என அவர்கள் எண்ணுகிறார்கள்.
இன்றைய டிஜிட்டல் உலகிலும் ஜோதிடம் பழமையானது என்றே சொல்ல முடியாது. அதற்கு பதிலாக, அது இன்னும் நெருக்கமாக நம்மைத் தேடி வந்திருக்கிறது. யூடியூப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற தளங்களில் ஜோதிடம் தொடர்பான ரீல்ஸ், வீடியோக்கள், பதிவுகள் பெருமளவில் வெளியாகின்றன. புதிய தலைமுறையினரும் ஆர்வத்துடன் அவற்றைப் பார்ப்பதோடு, தங்களின் வாழ்க்கை முடிவுகளுக்குப் பயன்படுத்துகின்றனர். சில நேரங்களில் இது பொய்யாக போகும்போது அதை கலாய்த்து மீம்ஸ்களும் வரத்தான் செய்கின்றன.



















Click it and Unblock the Notifications