எல்லாத்துக்கும் என்கிட்ட வாரீங்களே.. நான் இல்லைன்னா நீங்க என்னடா பண்ணுவீங்க!
சென்னை: முன்னொரு காலத்தில் எதையாவது தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் நம்மைச் சுற்றியிருந்தவர்களையே நம்பிக்கொள்வோம். பெரியவர்கள் சொன்னால் தான் சரியான பதில் என்று ஏற்றுக் கொள்வோம். காலம் மாறி, இணையம் வந்து சேர்ந்தபோது அந்த இடத்தை கூகுள் பிடித்துக் கொண்டது. எந்தச் சந்தேகமோ, கேள்வியோ இருந்தாலும் 'தேடல் பெட்டியில்' தட்டினால் பதில் கிட்டும். ஆனால் அங்கேயும் நாம் தேடித் தேடித் தான் சரியான தகவலைப் பிடிக்க வேண்டியிருந்தது.
இப்போது அதற்கும் அப்பாற்பட்டு, ஒரு நொடியில் அனைத்திற்கும் பதில் தரும் Artificial Intelligence (AI) நம்மிடம் வந்து சேர்ந்துவிட்டது. "எதை கேட்டாலும் உடனே பதில் தரும் நண்பன்" மாதிரி அது இருக்கிறது. கேள்விகளுக்குப் பதில் தருவது மட்டுமல்ல, விண்ணப்பங்கள் நிரப்புவது, தொழில் தொடங்க வழிகாட்டுவது, படங்களை எடிட் செய்வது, பாடப்பயிற்சிக்கான அசைன்மென்ட் எழுதுவது என எண்ணிலடங்கா வேலைகளைச் செய்து தருகிறது.

இதுவரை நாம் தகவலை தேடி அலைந்தோம். ஆனால் இப்போது தகவல் நம்மை வந்து சேர்ந்துவிட்டது. கற்றல், வேலை, பொழுதுபோக்குஎதிலும் AI-யின் பாதை தெளிவாக தெரிகிறது. மக்கள் கையில் இந்த சக்தி கிடைத்த பிறகு, சின்ன விஷயமோ பெரிய கனவோ, எதுவாக இருந்தாலும் அதை நிறைவேற்றும் வல்லமை கொண்ட கருவியாக AI மாறி வருகிறது. இது கொஞ்சம் ஓவர் ஆனதால் சமூக வலைத்தளங்களில் இதை வைத்து மீம்ஸ்கள் பறந்து வருகின்றன.




















Click it and Unblock the Notifications