அரங்கம் அதிருமா? கூலி படம் பார்த்தவன் மட்டும் சொல்லு..
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த புதிய படம் 'கூலி', இன்று உலகம் முழுவதும் வித்தியாசமான வரவேற்புடன் திரையரங்குகளில் களம் இறங்கியுள்ளது. முன்பதிவுகள் தொடங்கிய முதல்நாளிலேயே, பல இடங்களில் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தது ரசிகர்கள் ஆர்வத்தை நிரூபித்துவிட்டது. நகரங்கள் மட்டுமின்றி, சிறிய ஊர்களில்கூட புக்கிங் கவுண்டர்கள் ரசிகர்களின் நீண்ட வரிசைகளால் சூழப்பட்டன.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தனது ஸ்டைலுக்கு ஏற்ப, பல முன்னணி பிரபலங்களை ஒரே படத்தில் நடிக்க வைத்து, ரசிகர்களை கவர முயன்றுள்ளார் இது ரசிகர்கள் மத்தியில் புயலாக வீசுகிறது. படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் இந்நேரத்தில், ரஜினியின் ஸ்கிரீன் பிரசன்ஸ், லோகேஷ் கொடுத்த மாஸ் காட்சிகள், அனிருத் கொடுத்த பீட் என ரசிகர்கள் ஆவலுடன் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இதே நேரத்தில், சிலர் 'கூலி' 1000 கோடி வசூல் கிளப்பில் இணையுமா? இல்லையா? என்ற விவாதத்திலும் குதித்துள்ளனர். எதிர்பார்த்த அளவுக்கு படம் பேசப்படுமா என்ற கேள்வியும் ரசிகர்களின் மனதில் அலைமோதுகிறது.
மேலும், இன்னும் பலருக்கு டிக்கெட் கிடைக்காததால், சமூக வலைத்தளங்களில் "கதை சொல்லி ஸ்பாய்லர் பண்ணாதீங்க!" என்ற வேண்டுகோளும் பரவி வருகிறது. சிலர் படத்தை பார்த்துவிட்டதும், காட்சிகள், பாடல்கள், வசனங்கள் குறித்து கருத்துகளைப் பகிர்ந்து ரசிகர்களின் ஆர்வத்தை இன்னும் தூண்டிவருகின்றனர்.
'கூலி' பல மொழிகளில் வெளியானதால், தமிழ் நாடு மட்டுமின்றி, வட இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் ரஜினி ரசிகர்கள் திரையரங்குகளுக்கு திரண்டு வருகின்றனர்.





















Click it and Unblock the Notifications