நான் கேட்டது.. ஆனா அவர் எனக்கு கொடுத்தது.. கலக்கும் மீம்ஸ்!
சென்னை: ஆண்களின் வாழ்க்கையில் அடிக்கடி வரும் சிக்கல் என்றால் அது "முடி வெட்டுவது" தான். பெண்களுக்கு மாதக்கணக்கில் கூட பெரிய மாற்றம் தெரியாமல் இருக்கும். ஆனால் ஆண்களுக்கு வாரம் இரண்டு முறை தலையைச் சீவினாலே முடி நீண்டு விட்டதாகத் தோன்றும். அதனால் குறைந்தபட்சம் மாதத்திற்கு ஒருமுறை என்றாவது கடைக்குச் சென்று முடியை வெட்டி ஆக்க வேண்டும் என்ற கட்டாயம் இருக்கும்.
ஆனால் இங்கே தான் உண்மையான சிக்கல். நம்மை பொறுத்தவரை ஒரு வகையில் சுத்தமாக வெட்டிக்கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டு போகிறோம். "இங்கே கொஞ்சம் குறைஞ்சா போதும், மேலே கொஞ்சம் வையுங்க" என்று சொல்லிக் கொள்கிறோம். ஆனால் கத்தரிக்கோல் பிடித்திருப்பவர் அவர் நினைப்பது போலவே வெட்டி வைப்பார்.

அந்த நேரம் அவர் கடையில் பெரிய கண்ணாடிக்குள் பார்த்தால் நமக்கே ஹீரோ போலத் தோன்றும். அந்த அழகைக் கண்டால் நாமே நம்மை ரசித்து ரசித்து பார்த்துக்கொள்வோம். ஆனால் வீட்டுக்குள் சென்று கண்ணாடியில் நாமே சரிசெய்ய முயன்றாலும், எவ்வளவு பாடுபட்டாலும் அந்தக் கடைக்காரன் கொடுத்த லுக் திரும்ப கிடைக்காது. ஒரு ஸ்டைலில் முடி வெட்டி கொண்டு வீட்டிற்கு வந்தால் அம்மா உள்ளே விடாமல், ஆயிரம் குறைகளை சொல்வார். அவரை திருப்தி படுத்த மொட்டை போடும் நிலைக்கு செல்ல வேண்டி வரும்.



















Click it and Unblock the Notifications